கோவை: கோவையில் நரிக்குறவர்கள் நாட்டு வெடிகுண்டு (அவுட்டு காய்) தயாரித்தபோது திடீரென வெடித்ததில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- கோவை பெரியநாயக்கன்பாளையம், பிரஸ் காலனி, ஜோதிபுரம் நந்தினி காலனி உள்ளிட்ட பகுதியில் நரிக்குறவர்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் வசிப்பவர்கள் மணிமாறன் (வயது 50), ராஜா (வயது 35), ராமதாசு (வயது 30), பூந்தீராய் (வயது 25).
இவர்கள் அனைவரும் இன்று பன்றி உள்ளிட்ட விலங்குகளைப் பிடிப்பதற்காக நாட்டு வெடிகுண்டு தயாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அவற்றின் இறுக்கம் அதிகமாகி வெடித்தது. இதில் அவர்கள் 4 பேரும் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்கள் 4 பேரையும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மேலும் அவர்கள் நாட்டு வெடிகுண்டு தயாரித்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர்கள் அனைவரும் இன்று பன்றி உள்ளிட்ட விலங்குகளைப் பிடிப்பதற்காக நாட்டு வெடிகுண்டு தயாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அவற்றின் இறுக்கம் அதிகமாகி வெடித்தது. இதில் அவர்கள் 4 பேரும் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்கள் 4 பேரையும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மேலும் அவர்கள் நாட்டு வெடிகுண்டு தயாரித்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.