கோவை: கோவையில் நாளை மறுநாள் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சியை, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை ஏற்று நடத்துகிறார்.
கோவை: கோவையில் நாளை மறுநாள் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சியை, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை ஏற்று நடத்துகிறார்.
இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வருகிற 27 ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு சின்னிபம்பாளையம் உள்ள பிருந்தாவன் கார்டன் திருமண மண்டபத்தில், கோவை,ஈ ரோடு, திருப்பூர், நீலகிரி, ஆகிய மாவட்டங்களின் கட்சியின் அனைத்து பகுதி நிலை பொறுப்பாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் கலந்து கொள்கிற தேர்தல் 2021 குறித்த மாபெரும் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது.
மிக எழுச்சியாக நடைபெற உள்ள கூட்டத்தில்,.வருகிற 2021 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி எடுக்க இருக்கிற பிரச்சார உத்திகள், தேர்தலுக்கு முன் நடவடிக்கைகள் குறித்து கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களோடு சீமான் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இருக்கிறார்.
கொங்கு மண்டல மாநகரத்தில் நாம் தமிழர் கட்சியின் முதல் கட்ட தேர்தல் முன் தயாரிப்பு கூட்டமாக மிக பிரம்மாண்டமான முறையில் இந்தக் கூட்டம் நடைபெற இருக்கிறது. அதனால், கட்சியினுடைய அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், இவ்வாறு அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வருகிற 27 ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு சின்னிபம்பாளையம் உள்ள பிருந்தாவன் கார்டன் திருமண மண்டபத்தில், கோவை,ஈ ரோடு, திருப்பூர், நீலகிரி, ஆகிய மாவட்டங்களின் கட்சியின் அனைத்து பகுதி நிலை பொறுப்பாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் கலந்து கொள்கிற தேர்தல் 2021 குறித்த மாபெரும் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது.
மிக எழுச்சியாக நடைபெற உள்ள கூட்டத்தில்,.வருகிற 2021 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி எடுக்க இருக்கிற பிரச்சார உத்திகள், தேர்தலுக்கு முன் நடவடிக்கைகள் குறித்து கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களோடு சீமான் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இருக்கிறார்.
கொங்கு மண்டல மாநகரத்தில் நாம் தமிழர் கட்சியின் முதல் கட்ட தேர்தல் முன் தயாரிப்பு கூட்டமாக மிக பிரம்மாண்டமான முறையில் இந்தக் கூட்டம் நடைபெற இருக்கிறது. அதனால், கட்சியினுடைய அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், இவ்வாறு அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.