கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ்காரரிடம் கொள்ளையர்கள் செல்போனை பறித்துச் சென்றனர்.
கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ்காரரிடம் கொள்ளையர்கள் செல்போனை பறித்துச் சென்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- நாளை குடியரசு தின விழா கொண்டாடப்பட இருப்பதால் கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக கோவை நான்காவது பட்டாலியன் தமிழ்நாடு சிறப்பு காவல்துறையில் பணியாற்றும் அசோகன் (வயது 25) என்பவர் கோவை குனியமுத்தூர் அருகே உள்ள புட்டுவிக்கி ரோடு பாலம் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அந்தப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அசோகன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோதே அவரிடமிருந்த செல்போனை பறித்துவிட்டு மின்னல் வேகத்தில் மாயமாக மறைந்தனர்.
இதில் அதிர்ச்சி அடைந்த சிறப்புப்படை போலீஸ்காரர் அசோகன் கோவை குனியமுத்தூரில் புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் குனியமுத்தூர் போலீசார் வழிப்பறி வழக்குப்பதிவு செய்து போலீசாரிடம் திருடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சற்று முன் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- நாளை குடியரசு தின விழா கொண்டாடப்பட இருப்பதால் கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக கோவை நான்காவது பட்டாலியன் தமிழ்நாடு சிறப்பு காவல்துறையில் பணியாற்றும் அசோகன் (வயது 25) என்பவர் கோவை குனியமுத்தூர் அருகே உள்ள புட்டுவிக்கி ரோடு பாலம் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அந்தப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அசோகன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோதே அவரிடமிருந்த செல்போனை பறித்துவிட்டு மின்னல் வேகத்தில் மாயமாக மறைந்தனர்.
இதில் அதிர்ச்சி அடைந்த சிறப்புப்படை போலீஸ்காரர் அசோகன் கோவை குனியமுத்தூரில் புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் குனியமுத்தூர் போலீசார் வழிப்பறி வழக்குப்பதிவு செய்து போலீசாரிடம் திருடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சற்று முன் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.