தங்கத்திற்கு நிகராக மூலப்பொருட்களின் விலை உயர்வு..! நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் - கோவையில் ராகுல் காந்தி பேச்சு

கோவை: கோவையில் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கோவை காளப்பட்டி சாலையில் சிறு குறு தொழில் நிறுவன உரிமையாளர்களை சந்தித்து கலந்துரையாடினார்.


கோவை: கோவையில் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கோவை காளப்பட்டி சாலையில் சிறு குறு தொழில் நிறுவன உரிமையாளர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

அப்போது அவர் பேசியதாவது:

தொழில்துறையில் ஜி.எஸ்.டி முக்கிய பங்கு வகிக்கின்றது. பெரிய தொழில் நிறுவனங்கள், சிறு குறு தொழில் நிறுவனங்கள் ஜி.எஸ்.டியால் பாதிக்கப்படுகின்றன. ஜி.எஸ்.டி மாற்றி அமைக்கப்பட வேண்டும். வரி குறைப்பு செய்ய வேண்டும். ஜி எஸ் டி குறைப்பை அமல்படுத்த சரியான திட்டம் எங்களிடம் இருக்கின்றன. குறைந்த வரி சலுகையை தர வேண்டும். மக்களை புரிந்து கொண்டு அரசு செயல்பட வேண்டும். ஆனால், பாஜக இதை புரிந்து கொள்ளமாட்டர்கள். அவர்களுக்கு, இந்த பிரச்சினையில் நடவடிக்கை எடுக்க தெரியவில்லை. பேங்கிங்க் சிஸ்டம் பெரும் முதலாளிகளுக்கு சாதகமாக அமைக்கப்பட்டுள்ளன.

அரசின் பொருளாதார நடவடிக்கை சிறு குறு தொழில் நிறுவனத்தாரை பாதிக்கின்றது. இதனால், பெரு நிறுவனத்தாருக்கு சாதகமாக செயல்படுகின்றன.

பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் நாடுகள் சிறு, குறு தொழில் முனைவோரை பாதுகாக்க நல்ல பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பாஜக அரசு, நம் நாட்டின் சிறு குறு நிறுவனங்களுக்கு அதனை செய்யவில்லை. வேற்றுமை, வேற்றுமையில் ஒற்றுமை என்பது முக்கியம், அதை இந்தியா முழுவதும் சரியாக இருக்கும் பட்சத்தில் பொருளாதாரம் குறிப்பிட்ட விசயத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தால், அனைத்தும் பாதிக்கப்படும். ஒரே நாடு ஒரே மொழி தத்துவத்தால் பல பிரச்சினைகள் வர கூடும். பொருளாதாரம் முன்னேற்றம் அடையாது.



நாங்கள் குறைந்த வரி சலுகையில் ஜிஎஸ்டி கொண்டு வந்து விடுவோம். மத்தியில் ஆட்சி மாற்றம் வந்தால் மட்டுமே பெட்ரோல், டீசல் விலை குறையும். குறுந்தொழில் நிறுவனங்களுக்கும் அரசின் திட்டங்கள் கிடைக்க வேண்டும். தங்கத்திற்கு நிகராக மூலப்பொருட்கள் விலை உயர்ந்து வருகிறது. இது குறித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்.

நாடு முழுவதும் ஒரே வரி, அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சாத்தியமான குறைவான வரி கொள்கையை கொண்டு வருவதே எங்கள் இலக்கு. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை மேம்படுத்தாமல் நாட்டை முன்னேற்றம் அடையச் செய்ய முடியாது. நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....