திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்துக்காக, திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும்போது, பரம்பிக்குளம் பிரதான கால்வாய், கிளை கால்வாய்களில் இருந்து முறையற்ற வகையில் தண்ணீர் திருடுவதால், கடைமடைகளுக்கு பாசனத்துக்கு தண்ணீர் கிடைப்பதில்லை, என கடைமடை விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்துக்காக, திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும்போது, பரம்பிக்குளம் பிரதான கால்வாய், கிளை கால்வாய்களில் இருந்து முறையற்ற வகையில் தண்ணீர் திருடுவதால், கடைமடைகளுக்கு பாசனத்துக்கு தண்ணீர் கிடைப்பதில்லை, என கடைமடை விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதனடிப்படையில், தண்ணீர் திருட்டை தடுத்து நிறுத்தி விவசாயிகளின் நலனுக்காக பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் மூலம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உரிய தண்ணீர் கிடைக்க வருவாய்த்துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்), மின்வாரியம் ஆகிய துறை அலுவலர்களை உள்ளடக்கிய கூட்டுக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாசன ஆதாரங்களில் இருந்தும் நீர் திருட்டு உள்பட இதர முறைகேடுகளையும், இந்த குழுவினர் சுழற்சி முறையில் கண்காணிக்து, ரோந்துப்பணியில் ஈடுபடுவர்.

மேலும், கால்வாயின் கரைகளை சேதப்படுத்தியும், நேர்முகமாகவும், மறைமுகமாகவும் தண்ணீர் திருட்டு கண்டறியப்பட்டால் முறைகேடுக்கு பயன்படுத்தப்பட்ட தளவாடங்களை கைப்பற்றுவதுடன், கால்வாயில் தண்ணீர் எடுக்கும் நபர்கள் மீது தகுந்த குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், மின்மோட்டார்களை வைத்து தண்ணீர் திருடினால் சம்பந்தப்பட்ட விவசாய பூமியின் மின் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன் வெளயிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், தண்ணீர் திருட்டை தடுத்து நிறுத்தி விவசாயிகளின் நலனுக்காக பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் மூலம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உரிய தண்ணீர் கிடைக்க வருவாய்த்துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்), மின்வாரியம் ஆகிய துறை அலுவலர்களை உள்ளடக்கிய கூட்டுக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாசன ஆதாரங்களில் இருந்தும் நீர் திருட்டு உள்பட இதர முறைகேடுகளையும், இந்த குழுவினர் சுழற்சி முறையில் கண்காணிக்து, ரோந்துப்பணியில் ஈடுபடுவர்.
மேலும், கால்வாயின் கரைகளை சேதப்படுத்தியும், நேர்முகமாகவும், மறைமுகமாகவும் தண்ணீர் திருட்டு கண்டறியப்பட்டால் முறைகேடுக்கு பயன்படுத்தப்பட்ட தளவாடங்களை கைப்பற்றுவதுடன், கால்வாயில் தண்ணீர் எடுக்கும் நபர்கள் மீது தகுந்த குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், மின்மோட்டார்களை வைத்து தண்ணீர் திருடினால் சம்பந்தப்பட்ட விவசாய பூமியின் மின் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன் வெளயிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.