முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கோவை வந்தார்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் உற்சாக வரவேற்பு!

கோவை: கோவையில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கோவை வந்தார். அவருக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


கோவை: கோவையில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கோவை வந்தார். அவருக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவையில் நாளையும், நாளை மறுநாளும் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று மாலை விமானம் மூலம் கோவை வந்தார். அங்கு நகராட்சி நிர்வாக மற்றும் சிறப்பு செயலாக்கத் துறை அமைச்சர் எஸ். பி வேலுமணி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

விமானத்தில் இருந்து வெளியே வந்த முதலமைச்சரை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். கட்சி நிர்வாகிகள், மாநகர் மாவட்ட, புறநகர், வட்டம், ஒன்றியம், பஞ்சாயத்துக்கு உட்பட்ட அனைத்து அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியைச் சேர்ந்தவர்கள் எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் வரவேற்பளித்தனர்.

விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த முதலமைச்சருக்கு தாரை தப்பட்டைகள் முழங்க பட்டாசு வெடித்து தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொடிசியாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முதலீட்டாளர்கள் மற்றும் சிறு மற்றும் குறு தொழிலதிபர்களைச் சந்தித்து உரையாடினார். பின்னர் புருக் பாண்ட் சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்குச் சென்று ஓய்வு எடுக்கச் சென்றார்.

இதையடுத்து நாளை காலை டவுன்ஹால் சாலையில் உள்ள கோனியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்து தன்னுடைய முதல் நாள் பிரச்சாரத்தை துவக்குகிறார். கோவில் நிர்வாகம் சார்பாக முதல்வருக்கு பூரண கும்ப மரியாதை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதை அவர் ஏற்றுக் கொள்கிறார்.

முதல்வர் வருகையையொட்டி கோவை நகரெங்கும் வரவேற்பு மற்றும் தோரணங்கள், அ.தி.மு.க. கட்சி கொடிகள் என அவர் செல்லும் இடமெல்லாம் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் கோவை மாவட்ட மற்றும் புறநகர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அமைச்சர் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவையில் முதலமைச்சர் 2 நாள் தேர்தல் பிரச்சாரம் செய்வதையொட்டி அனைத்து இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Newsletter

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....