கோவையில் 10 சட்டமன்ற தொகுதிகளில் முதல்வர் தேர்தல் பிரச்சாரம்..!

கோவை: கோவை மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகிற 22 மற்றும் 23 ஆகிய இரண்டு நாட்கள் 10 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.



கோவை: கோவை மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகிற 23 மற்றும் 24 ஆகிய இரண்டு நாட்கள் 10 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

அவருடைய சுற்றுப்பயண விபரம் வருமாறு:

23ஆம் தேதி: கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட ராஜ ராஜ வீதியில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தை காலை 8 மணிக்கு துவங்குகிறார். அதைத் தொடர்ந்து, செல்வபுரம், குனியமுத்தூர், கரும்புக்கடை, சுந்தராபுரம், மதுக்கரை மார்க்கெட் கிணத்துக்கடவு ,கோவில் பாளையம் ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்கிறார்.

பின்னர், பிற்பகல் 3 மணிக்கு பொள்ளாச்சி திருவள்ளுவர் திடல், ஆனைமலை, மாசாணியம்மன் கோவில், சுல்தான்பேட்டை வழியாக சூலூர் செல்கிறார். அதே நாள், இரவு 8 மணிக்கு கோவை கொடிசியா வளாகத்தில் கோவை தொழில் அதிபர்களை சந்தித்து பேசுகிறார்.

முதல் நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தங்குகிறார்.

24ஆம் தேதி: காலை 8 மணிக்கு கோவை புலியகுளம் பகுதியில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தை தொடங்குகிறார். தொடர்ந்துு, சிங்காநல்லூர், பீளமேடு புதூர், காளப்பட்டி, அன்னூர், மேட்டுப்பாளையம், காரமடை ரங்கநாதர் கோயில் ஆகிய இடங்களில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு, பின்னர் மதியம் மூன்று மணிக்கு பெரியநாயக்கன் பாளையம், துடியலூர், சாய்பாபா காலனி, வடவள்ளி, தொண்டாமுத்தூர், கோனியம்மன் கோவில் ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்யவுள்ளார்.

பின்னர், 9 மணிக்கு அரசு விருந்தினர் மாளிகைக்கு வருகிறார். அன்றிரவு கோவையில் தங்குகிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் தேர்தல் சுற்றுப் பயணத்துக்கான ஏற்பாடுகளை அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில் கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Newsletter

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....