கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கை திசை திருப்பும் அதிமுக அரசையும் அதற்கு துணை போகும் காவல் துறையையும் கண்டித்து கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் திருவள்ளுவர் திடலில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கை திசை திருப்பும் அதிமுக அரசையும் அதற்கு துணை போகும் காவல் துறையையும் கண்டித்து கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் திருவள்ளுவர் திடலில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் தலைமையில் கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில், பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் திராவிட முன்னேற்ற கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் நெல்லிக்குப்பம் புகழேந்தி M.L.A மற்றும் நளினி சாரங்கன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
பொள்ளாச்சி நகர பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜ் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம், ஒன்றிய பொறுப்பாளர்கள் செட்டியக்காபாளையம் துரை, தேவேசேனாதிபதி, அய்யம்பாளையம் ராசு, மருதவேல், மாநில நெசவாளர் அணி செயலாளர் குள்ளக்காபாளையம் நாகராஜன் மற்றும் கழகத் தோழர்கள், பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்
இதனிடையே, கூட்டத்தில் பேசிய நெல்லிக்குப்பம் புகழேந்தி, வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் கழகத் தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் ஆவது உறுதி எனவும், அதிமுக ஆட்சியாளர்கள் மக்களுக்கு பயன் தரும் வகையில் எந்த திட்டத்தையும் கொண்டு வருவதில்லை என்றும் ஒப்பந்ததாரர்கள் பயன்பெறும் வகையில் சாலைகளை திட்டமிட்டு போட்டு வருவதாக குற்றம்சாட்டினார்.
கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் தலைமையில் கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில், பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திராவிட முன்னேற்ற கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் நெல்லிக்குப்பம் புகழேந்தி M.L.A மற்றும் நளினி சாரங்கன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
பொள்ளாச்சி நகர பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜ் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம், ஒன்றிய பொறுப்பாளர்கள் செட்டியக்காபாளையம் துரை, தேவேசேனாதிபதி, அய்யம்பாளையம் ராசு, மருதவேல், மாநில நெசவாளர் அணி செயலாளர் குள்ளக்காபாளையம் நாகராஜன் மற்றும் கழகத் தோழர்கள், பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்
இதனிடையே, கூட்டத்தில் பேசிய நெல்லிக்குப்பம் புகழேந்தி, வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் கழகத் தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் ஆவது உறுதி எனவும், அதிமுக ஆட்சியாளர்கள் மக்களுக்கு பயன் தரும் வகையில் எந்த திட்டத்தையும் கொண்டு வருவதில்லை என்றும் ஒப்பந்ததாரர்கள் பயன்பெறும் வகையில் சாலைகளை திட்டமிட்டு போட்டு வருவதாக குற்றம்சாட்டினார்.