வரதட்சணை கேட்டு தொடர்ந்து கொடுமை: கோவை ஸ்டீல் வியாபாரி குடும்பம் மீது புகார்!

கோவை: திருமணமாகி 4 வருடமே ஆன பெண்ணிடம் தொடர்ந்து வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாக கோவையைச் சேர்ந்த ஸ்டீல் வியாபாரி குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மீது புகார் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


கோவை: திருமணமாகி 4 வருடமே ஆன பெண்ணிடம் தொடர்ந்து வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாக கோவையைச் சேர்ந்த ஸ்டீல் வியாபாரி குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மீது புகார் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை காளப்பட்டி நேரு வீதி திருமுருகன் நகர் பகுதியில் வசிப்பவர் சுகன்யா ஜாஸ்மின் (வயது 32). எம்.ஃபில் படித்துள்ளார். கோவை கணபதி சி.எம்.எஸ். ஸ்கூல் பின்புறம் வசிப்பார் சார்லஸ் ஆபிரகாம் (வயது 36). ஐ.டி. ஊழியர். இவர்கள் இருவருக்கும் கடந்த 26.5.2016 அன்று பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்து வைக்கப்பட்டது. சுகன்யா ஜாஸ்மின் கணபதியில் உள்ள தனது கணவர் வீட்டில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு மூன்று வயதில் ஆண் குழந்தை உள்ளது.

கணவர் சார்லஸ் ஆபிரகாம் ஐ.டி கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் திருமணத்தின் போது மணமகன் வீட்டார் 175 பவுன் நகையும், 25 லட்சம் ரொக்கமும் கேட்டுள்ளனர். திருமணத்தின்போது மணப்பெண் வீட்டில் 100 பவுன் நகையும் 20 லட்சம் ரொக்கமும் கொடுத்துள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து அந்தப் பெண்ணிடம் மேலும் பணம் கேட்டு குடும்பத்தில் உள்ளவர்கள் அந்தப் பெண்ணிடம் தொடர்ந்து வரதட்சணை கேட்டு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கொடுமை செய்து வந்தனர். இதனால் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சுகன்யா ஜாஸ்மின் கொடுமை தாங்க முடியாமல் தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில் போன் மூலமாக தொடர்ந்து அந்தப் பெண்ணுக்கு வரதட்சணை கேட்டு டார்ச்சல் செய்ததால் அவர் அனைத்து மகளிர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரித்ததில் சுகன்யா ஜாஸ்மினின் கணவர் சார்லஸ் ஆபிரகாம், மாமனார் கிறிஸ்டோபர், மாமியார் டோரதி, கொழுந்தனார் ஆசீர் ஆகியோர்மீது ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கொழுந்தனார் ஆசீர் தனது அண்ணி சுகன்யா ஜாஸ்மினின் புகைப்படத்தை அவரது செல் நம்பர் அருகே வாட்ஸ்அப் புரொபைலில் பதிவு செய்து அழைப்புகளை தனது செல்லில் பதிந்து வைத்துள்ளதையும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஆதலால் அனைத்து மகளிர் காவல் நிலைய கிழக்கு இன்ஸ்பெக்டர் அமுதா தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்.

Newsletter

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....