10 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பள்ளிகள் திறப்பு: பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 96 பள்ளிகள் திறக்கப்பட்டன!

கோவை: 10 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 96 பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.


கோவை: 10 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 96 பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. தற்போது நோய்த்தொற்று பாதிப்பு குறைந்து வருவதால், பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோரிடம் அரசு கருத்து கேட்பு கூட்டம் நடத்தியது. இதனடிப்படையில், பள்ளிகளை திறக்க அரசு அனுமதித்தது. இதில், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 96 தனியார் மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. காலை முதலே மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வர தொடங்கி உள்ளனர்.



பள்ளி நுழைவாயில் முன் மாணவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க விதமாக நிறுத்தி வைக்கப்பட்டு, தெர்மோமீட்டர் மூலம் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.



மேலும் பெற்றோரிடம் இருந்து பெறப்பட்ட ஒப்புதல் கடிதத்தை பெற்றுக்கொண்டு, பள்ளி வகுப்பறைக்குள் மாணவர்கள் அனுமதித்திக்கபட்டனர்.

வகுப்பறைகளில் சானிடைசர் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.



முதல் இரண்டு நாட்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பயிற்சிகள் அளிக்கப்படும் என்றும், அதன் பிறகு வழக்கம்போல் வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர்.

Newsletter

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....