கோவையில் ரூ.2 கோடியில் தார்‌ச்சாலை அமைக்கும்‌ பணிக்கான பூமி பூஜை: அமைச்சர் எஸ்‌.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்!

கோவை: கோவையில் ரூ.2 கோடியில் தார்‌ச்சாலை அமைக்கும்‌ பணிக்கான பூமி பூஜையை அமைச்சர் எஸ்‌.பி.வேலுமணி தொடங்கி வைத்தார். தியாகராஜா நகரில்‌ ரூ.8 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக்கடை கட்டடத்தையும்‌, கல்கி கார்டன்‌ பகுதியில்‌ ரூ.64.90 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ இறகுப் பந்து உள்விளையாட்டரங்கத்தையும்‌ பொதுமக்களின்‌ பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார்.


கோவை: கோவையில் ரூ.2 கோடியில் தார்‌ச்சாலை அமைக்கும்‌ பணிக்கான பூமி பூஜையை அமைச்சர் எஸ்‌.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.



தியாகராஜா நகரில்‌ ரூ.8 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக்கடை கட்டடத்தையும்‌, கல்கி கார்டன்‌ பகுதியில்‌ ரூ.64.90 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ இறகுப் பந்து உள்விளையாட்டரங்கத்தையும்‌ பொதுமக்களின்‌ பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார்.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி தெற்கு மண்டலத்தில்‌ ரூ.2 கோடியே 54 லட்சத்து 85 ஆயிரம்‌ மதிப்பீட்டில்‌ தார்ச்சாலை அமைக்கும்‌ பணி, காசிநாத்‌ கார்டன்‌ பகுதியில்‌ ரூ.22.60 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ விளையாட்டு வளாகம்‌ மற்றும்‌ உடற்பயிற்சிக்கூடம்‌ அமைக்கும்‌ பணிகளுக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்‌ திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சா்‌ எஸ்‌.பி.வேலுமணி ‌பூமி பூஜை செய்து பணிகளையும் தொடங்கிவைத்தார்.



தியாகராஜாநகரில்‌ ரூ.8 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக்கடை கட்டடம் மற்றும் கல்கி கார்டன்‌ பகுதியில்‌ ரூ.64.90 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ இறகுப்பந்து உள்விளையாட்டரங்கத்தை‌ பொதுமக்கள்‌ பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி தெற்கு மண்டலத்தில்‌ டர்ஃப் (Turf) திட்டத்தின்கீழ்‌ வார்டு எண்‌ 90-க்கு உட்பட்ட ஹவுசிங்யூனிட்‌ டபிள்யூ.பிளாக்‌ பகுதியில் ரூ.17 லட்சம்‌ மதிப்பீட்டிலும்‌, சாந்தி ஆசிரமம்‌ சாலை மற்றும்‌ ஹவுசிங்யூனிட்‌ ஆர்‌.பிளாக்‌ பகுதிகளில்‌ ரூ.38.10 லட்சம்‌ மதிப்பீட்டிலும்‌, லட்சுமி நகர்‌ பகுதியில்‌ ரூ.12 லட்சம்‌ மதிப்பீட்டிலும்‌, மீனாட்சி நகா்‌ பகுதியில்‌ ரூ.12.50 லட்சம்‌ மதிப்பீட்டிலும்‌, வார்டு எண்‌ 89-க்கு உட்பட்ட அம்மா நகர்‌ பகுதியில்‌ ரூ.7.50 லட்சம்‌ மதிப்பீட்டிலும்‌, மருதம்‌ நகர்‌ மற்றும்‌ சமீம்‌ கார்டன்‌ பகுதிகளில்‌ ரூ.48.85 லட்சம்‌ மதிப்பீட்டிலும்‌, மருத்துவமனை சாலை மற்றும்‌ அண்ணாநகர் சாலை ஆகிய பகுதிகளில்‌ ரூ.12.70 லட்சம்‌ மதிப்பீட்டிலும்‌, வார்டு எண்‌ 91-க்கு உட்பட்ட ஓம்சக்தி நகர்‌, காமாட்சி பெட் (bet) பகுதியில்‌ ரூ.19.30 லட்சம்‌ மதிப்பீட்டிலும்‌, ஜெ.ஆர்.டி.கார்டன்‌ மற்றும்‌ விஷால்‌ எஸ்டேட்‌ பகுதியில்‌ ரூ.7.70 லட்சம்‌ மதிப்பீட்டிலும்‌, கோகுலம்‌ காலனி பகுதியில்‌ ரூ.36.50 லட்சம்‌ மதிப்பீட்டிலும்‌, குளத்துப்பாளையம்‌ பிரதான சாலையில்‌ 14.80 லட்சம்‌ மதிப்பீட்டிலும்‌, வசந்தம்‌ ஹெச்.எஸ்.டி (HST), கல்கி கார்டன்‌ ஆகிய பகுதிகளில்‌ ரூ.27.90 லட்சம்‌ மதிப்பீட்டிலும்‌ தார்ச்சாலைகள்‌ அமைக்கும்‌ பணிகளுக்கான பூமி பூஜையையும்‌ ஆகமொத்தம்‌ ரூ.2 கோடியே 54 லட்சத்து 85 ஆயிரம்‌ மதிப்பீட்டிலான தார்‌ச்சாலை அமைக்கும்‌ பணிகளுக்கான பூமி பூஜையையும் அமைச்சர் எஸ்‌.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.

பின்னர்‌, வார்டு எண்‌ 89-க்குட்பட்ட காசிநாத்‌ கார்டன்‌ பகுதியில்‌ மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.22.60 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ விளையாட்டு வளாகம்‌ மற்றும்‌ உடற்பயிற்சிக்கூடம்‌ அமைக்கும்‌ பணிகளுக்கான பூமி பூஜையை துவக்கி வைத்தார். தியாகராஜா நகரில்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.8 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக்கடை கட்டடம்‌, வார்டு எண்‌ 91-க்கு உட்பட்ட கல்கி கார்டன்‌ பகுதியில்‌ மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.64.90 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ அமைக்கப்பட்ட உள்விளையாட்டு அரங்கத்தை‌ பொதுமக்கள்‌ பயன்பாட்டுக்காக அமைச்சர் வேலுமணி திறந்து வைத்தார்‌.

இந்நிகழ்ச்சிகளில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலா்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌‌, துணை ஆணையாளர்‌ எஸ்‌.மதுராந்தகி‌, மாநகரப்‌ பொறியாளர்‌ ஆ.லட்சுமணன்‌, தெற்கு மண்டல ஆணையர்‌ தி.ரா.ரவி, செயற்பொறியாளர்‌ ஞானவேல்‌ மற்றும்‌ உதவிப்‌ பொறியாளர்கள்‌, உதவி செயற்பொறியாளா்கள்‌ மற்றும்‌ மண்டல சுகாதார அலுவலர்‌ லோகநாதன்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ கலந்து கொண்டனா்‌.

Newsletter

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....