திருப்பூர்: வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி திருப்பூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற சிஐடியு தொழிற்சங்கத்தினரும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
திருப்பூர்: வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி திருப்பூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற சிஐடியு தொழிற்சங்கத்தினரும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் 40 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இதுவரை அறுபதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளதாகவும், உடனடியாக மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வேளாண் சட்ட திருத்த மசோதா உள்ளிட்ட மூன்று மசோதாக்களையும் திரும்பப் பெற வேண்டும் எனவும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது என வலியுறுத்தி திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து குமரன் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயற்சித்தனர்.
அப்போது, போலீசார் தடுப்புகளை அமைத்து சிஐடியு தொழிற்சங்கத்தினரை தடுத்ததால் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இந்த போராட்டத்தால் திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் 40 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இதுவரை அறுபதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளதாகவும், உடனடியாக மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வேளாண் சட்ட திருத்த மசோதா உள்ளிட்ட மூன்று மசோதாக்களையும் திரும்பப் பெற வேண்டும் எனவும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது என வலியுறுத்தி திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து குமரன் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயற்சித்தனர்.
அப்போது, போலீசார் தடுப்புகளை அமைத்து சிஐடியு தொழிற்சங்கத்தினரை தடுத்ததால் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இந்த போராட்டத்தால் திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.