கோவை: ஆண்டுகளைக் கடந்த சிறைக்கைதிகளை ஜாதி மத பேதமின்றி உடனடியாக விடுவிக்க அமைச்சர் வேலுமணியிடம் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
கோவை: ஆண்டுகளைக் கடந்த சிறைக்கைதிகளை ஜாதி மத பேதமின்றி உடனடியாக விடுவிக்க அமைச்சர் வேலுமணியிடம் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மனிதநேய ஜனநாயக கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கோவை சுல்தான் அமீர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் நிர்வாகிகள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியைச் சந்தித்தனர்.

அப்போது, தமிழக சிறைகளில் 22 ஆண்டுகளைக் கடந்த ஆயுள் தண்டனை சிறைவாசிகளை ஜாதி, மத பேதமின்றி விடுதலை செய்யக்கோரிக்கை விடுத்தனர். மேலும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் விடுதலை செய்யப்படாத சிறைவாசிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் எடுத்துரைக்கப்பட்டன.
இதுதொடர்பான முழு கோரிக்கையையும் கேட்ட அமைச்சர் இதை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக ம.ஜ.க. நிர்வாகிகளிடம் தெரிவித்தார். இச்சந்திப்பின் போது மாவட்ட செயலாளர் எம்.எச்.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் டி.எம்.எஸ்.அப்பாஸ், மாவட்ட துணைச் செயலாளர் ஏ.டி.ஆர்.பதுருதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அமீர் அப்பாஸ், சிறைவாசிகள் நல ஒருங்கிணைப்பாளர் அப்துல் பாசித், மற்றும் சிறைவாசிகள், குடும்பத்தார்கள் உடனிருந்தனர்.
மனிதநேய ஜனநாயக கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கோவை சுல்தான் அமீர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் நிர்வாகிகள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியைச் சந்தித்தனர்.
அப்போது, தமிழக சிறைகளில் 22 ஆண்டுகளைக் கடந்த ஆயுள் தண்டனை சிறைவாசிகளை ஜாதி, மத பேதமின்றி விடுதலை செய்யக்கோரிக்கை விடுத்தனர். மேலும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் விடுதலை செய்யப்படாத சிறைவாசிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் எடுத்துரைக்கப்பட்டன.
இதுதொடர்பான முழு கோரிக்கையையும் கேட்ட அமைச்சர் இதை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக ம.ஜ.க. நிர்வாகிகளிடம் தெரிவித்தார். இச்சந்திப்பின் போது மாவட்ட செயலாளர் எம்.எச்.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் டி.எம்.எஸ்.அப்பாஸ், மாவட்ட துணைச் செயலாளர் ஏ.டி.ஆர்.பதுருதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அமீர் அப்பாஸ், சிறைவாசிகள் நல ஒருங்கிணைப்பாளர் அப்துல் பாசித், மற்றும் சிறைவாசிகள், குடும்பத்தார்கள் உடனிருந்தனர்.