கோவை: வால்பாறையில், அரசு அனுமதி பெறாத தங்கும் விடுதிகளுக்கு சீல் வைக்கப்படும் என்று வட்டாட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவை: வால்பாறையில், அரசு அனுமதி பெறாத தங்கும் விடுதிகளுக்கு சீல் வைக்கப்படும் என்று வட்டாட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோவை மாவட்டம் வால்பாறையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதன்காரணமாக வால்பாறை ரொட்டிக்கடை சோலையார் அணை மற்றும் தேயிலைத் தோட்ட பகுதிகளில் ஏராளமான தங்கும் விடுதிகள் உருவாகியுள்ளன. வால்பாறை பகுதி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வருவதால் இப்பகுதியில் தங்கும் விடுதிகளில் ஏற்கெனவே இருக்கும் கட்டடங்களை மாற்றி அமைப்பதற்கும் புதிதாக கட்டுவதற்கும் கண்டிப்பாக அரசு அனுமதி பெற்றாக வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். ஆனால் வால்பாறையில் ஒரு சிலர் மட்டுமே முறையான அனுமதி பெற்று தங்கும் விடுதிகளை நடத்தி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து வால்பாறை வட்டாட்சியர் ராஜா தலைமையில் வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் தங்கும் விடுதி உரிமையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வரும் பிப்ரவரி மாத இறுதிக்குள் அனைத்து தங்கும் விடுதி கட்டடங்களுக்கும் பப்ளிக் பில்டிங் லைசென்ஸ் கண்டிப்பாக பெற்றாக வேண்டும். தவறும் காட்டேஜ் உரிமையாளர்களின் தங்கும் விடுதி கட்டடங்கள் பூட்டி சீல் வைக்கப்படும் என்று வால்பாறை வட்டாட்சியர் ராஜா அறிவுறுத்தியுள்ளார். கூட்டத்தில் வட்டாட்சியர் ராஜா, கிராம நிர்வாக அலுவலர் விஜய் அமிர்தராஜ் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதன்காரணமாக வால்பாறை ரொட்டிக்கடை சோலையார் அணை மற்றும் தேயிலைத் தோட்ட பகுதிகளில் ஏராளமான தங்கும் விடுதிகள் உருவாகியுள்ளன. வால்பாறை பகுதி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வருவதால் இப்பகுதியில் தங்கும் விடுதிகளில் ஏற்கெனவே இருக்கும் கட்டடங்களை மாற்றி அமைப்பதற்கும் புதிதாக கட்டுவதற்கும் கண்டிப்பாக அரசு அனுமதி பெற்றாக வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். ஆனால் வால்பாறையில் ஒரு சிலர் மட்டுமே முறையான அனுமதி பெற்று தங்கும் விடுதிகளை நடத்தி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து வால்பாறை வட்டாட்சியர் ராஜா தலைமையில் வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் தங்கும் விடுதி உரிமையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வரும் பிப்ரவரி மாத இறுதிக்குள் அனைத்து தங்கும் விடுதி கட்டடங்களுக்கும் பப்ளிக் பில்டிங் லைசென்ஸ் கண்டிப்பாக பெற்றாக வேண்டும். தவறும் காட்டேஜ் உரிமையாளர்களின் தங்கும் விடுதி கட்டடங்கள் பூட்டி சீல் வைக்கப்படும் என்று வால்பாறை வட்டாட்சியர் ராஜா அறிவுறுத்தியுள்ளார். கூட்டத்தில் வட்டாட்சியர் ராஜா, கிராம நிர்வாக அலுவலர் விஜய் அமிர்தராஜ் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.