கோவை: கோவை லங்கா கார்னர் அருகே நீர்வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
கோவை: கோவை லங்கா கார்னர் அருகே நீர்வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
கோவை அரசு மருத்துவமனை அருகே திருச்சி சாலையில் இருந்து பெரிய கடை வீதி செல்லும் வழியில் லங்கா கார்னர் பகுதி உள்ளது. இந்த பகுதியில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. இதன் கீழ் பகுதியில் மழைக் காலங்களில் சுமார் 3 அடி தூரம் வரை நீர் தேங்கி நிற்கும். இதனால் போக்குவரத்து பாதிக்கும்.
லங்கா கார்னர் அருகே வாலாங்குளத்துக்கு மழை நீரை கொண்டு போய் சேர்க்கும் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் பகுதியில் கட்டடங்கள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.
இதையடுத்து லங்கா கார்னர் பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் வாய்க்கால் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்படிருந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட கட்டட உரிமையாளர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘லங்கா கார்னர் பகுதியில் நோட்டீஸ் வழங்கியுள்ள கட்டட உரிமையாளர்கள் வாய்க்கால் பகுதியில் உள்ள தங்களது கட்டடங்களை அகற்ற வேண்டும். இல்லை என்றால் மாநகராட்சி நிர்வாகம் சார்பாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.
கோவை அரசு மருத்துவமனை அருகே திருச்சி சாலையில் இருந்து பெரிய கடை வீதி செல்லும் வழியில் லங்கா கார்னர் பகுதி உள்ளது. இந்த பகுதியில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. இதன் கீழ் பகுதியில் மழைக் காலங்களில் சுமார் 3 அடி தூரம் வரை நீர் தேங்கி நிற்கும். இதனால் போக்குவரத்து பாதிக்கும்.
லங்கா கார்னர் அருகே வாலாங்குளத்துக்கு மழை நீரை கொண்டு போய் சேர்க்கும் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் பகுதியில் கட்டடங்கள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.
இதையடுத்து லங்கா கார்னர் பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் வாய்க்கால் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்படிருந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட கட்டட உரிமையாளர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘லங்கா கார்னர் பகுதியில் நோட்டீஸ் வழங்கியுள்ள கட்டட உரிமையாளர்கள் வாய்க்கால் பகுதியில் உள்ள தங்களது கட்டடங்களை அகற்ற வேண்டும். இல்லை என்றால் மாநகராட்சி நிர்வாகம் சார்பாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.