காதலி கழுத்தை அறுத்த டிரைவர் தானும் கழுத்தை அறுத்துக்கொண்டார்!

திருப்பூர்: காதலியின் கழுத்தை அறுத்ததுடன் தனது கழுத்தையும் அறுத்துக்கொண்டு டிரைவர் தற்கொலை முயன்றார். இச்சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.


திருப்பூர்: காதலியின் கழுத்தை அறுத்ததுடன் தனது கழுத்தையும் அறுத்துக்கொண்டு டிரைவர் தற்கொலை முயன்றார். இச்சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 27). சென்னையில் தங்கி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் திருமணமாகி, மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் வெங்கடேஷுக்கு, சொந்த ஊரைச் சேர்ந்த எழில்மதி (வயது 21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த, ஓராண்டாக இருவரும் காதலித்து வந்தனர்.

இந்நிலையில், எழில்மதியை பார்ப்பதற்காக வெங்கடேஷ் சென்னையில் இருந்து திருப்பூர் வந்தார். வளர்மதி பாலம் அருகே லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தங்கினார். வெங்கடேஷைப் பார்க்க, எழில்மதியும் லாட்ஜுக்குச் சென்றார். அங்கு அவர்கள் இருவரிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த வெங்கடேஷ், எழில்மதியின் கழுத்தை கத்தியால் அறுத்தார். தொடர்ந்து, வெங்கடேஷ் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இருவரும் அவிநாசி ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புகாரின்பேரில், வெங்கடேஷ் மீது தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

அமராவதி-திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணை நீர்மட்டம் ஜூலை 23ஆம் தேதி 50.43 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்ட அண...

ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

கோவையில் ஆழியார் அணை 55.55 அடி, பரம்பிக்குளம் அணை 21.84 அடி, சோலையாறு அணை 75.19 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளன. தென்மேற்கு...

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...