தி.மு.க. கிராமசபை கூட்டங்களுக்கு பெரும் வரவேற்பு: அமைப்புச் செயலாளர் ஆர.எஸ்.பாரதி கோவையில் பேட்டி!

கோவை: தி.மு.க. கிராமசபை கூட்டங்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருப்பதாக அமைப்புச் செயலாளர் ஆர.எஸ்.பாரதி கூறினார்.


கோவை: தி.மு.க. கிராமசபை கூட்டங்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருப்பதாக அமைப்புச் செயலாளர் ஆர.எஸ்.பாரதி கூறினார்.



தந்தை பெரியாரின் 47-வது நினைவு தினத்தையொட்டி கோவை சுந்தராபுரம் அருகே குறிச்சிப் பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்எஸ்.பாரதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தையடுத்து செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பிற்கு ஏற்ப வரும் ஜனவரி 10-ந்தேதி வரை தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் 16 ஆயிரம் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.

இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று அவர்கள் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை ஆளுநரிடம் மனுவாக அளித்துள்ளோம். இதனை மக்களிடம் விளக்கும் வகையில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. அ.தி.மு.க அமைச்சர்களின் ஊழல்களை விவரித்து தி.மு.க.வினர் வீடு வீடாக பரப்புரை மேற்கொள்ள உள்ளனர். அ.தி.மு.க.வின் ஊழல் ஆட்சியை ஒழிக்க வேண்டுமெனவும் மக்களிடையே வரலாறு காணாத எழுச்சி ஏற்பட்டுள்ளது. இது ஆட்சி மாற்றத்திற்கான அடையாளமாகத் தெரிகிறது. 

இவ்வாறு அவர் கூறினார். 

பின்னர் மலுமிச்சம்பட்டி பகுதி நால்ரோட்டுப் பகுதியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டார்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...