4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: டிரைவர், உதவியாளருக்கு ஆயுள் சிறை; கோவை கோர்ட் தீர்ப்பு!

கோவை: கோவையில் 4 வயது சிறுமிக்கு மயக்க ஊசி செலுத்தி பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி வேன் டிரைவர் உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட் தீர்ப்பளித்தது.



கோவை: கோவையில் 4 வயது சிறுமிக்கு மயக்க ஊசி செலுத்தி பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி வேன் டிரைவர் உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட் தீர்ப்பளித்தது.

கோவை காரமடை பிளிச்சி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 37). தனியார் பள்ளி வேன் டிரைவர். அந்த வேனில் கண்ணார் பாளையத்தைச் சேர்ந்த மாரிமுத்து (வயது 50) உதவியாளராக பணிபுரிந்தார். கடந்த 29.1.2019 அன்று பள்ளி முடிந்ததும் வழக்கம்போல மாணவ - மாணவிகளை வேனில் அழைத்துச் சென்று அவரவர் வீடுகளில் கொண்டு விட்டனர். டிரைவர் கோவிந்தராஜ், உதவியாளர் மாரிமுத்து ஆகிய இருவரும் வேனில் இருந்த 4 வயது மாணவிக்கு மயக்க ஊசி செலுத்தி பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர் வழக்கம்போல மாணவியை அவரது வீட்டில் விட்டுவிட்டு சென்று விட்டனர்.

இந்நிலையில் அந்த மாணவியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரது பெற்றோர் டாக்டரிடம் மாணவியை அழைத்துச் சென்று காட்டினர். அப்போதுதான் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது.



இதையடுத்து மாணவியின் பெற்றோர் துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீசார் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பள்ளி வேன் டிரைவர் கோவிந்தராஜ், உரிமையாளர் மாரிமுத்து ஆக இருவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். 

இது தொடர்பான வழக்கு கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராதிகா மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த டிரைவர் கோவிந்தராஜ், உதவியாளர் மாரிமுத்து ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இந்தத் தீர்ப்பு நேற்று கோவை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...