நீலகிரி: குன்னூர் கொலக்கம்பை பகுதியில் நாணயமான சிறுமி தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி: குன்னூர் கொலக்கம்பை பகுதியில் நாணயமான சிறுமி தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கொலக்கம்பை பகுதியி்ல் தனியார் தேயிலை எஸ்டேட்டில் பணிபுரிபவர் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த லட்சுமண் ராம். இவரது 8 வயது மகளை கடந்த 2 நாட்களாக காணவில்லை. இந்நிலையில், புதன்கிழமை அவரை கிரேக்மாேர் வனப்பகுதி மற்றும் அங்குள்ள நீரோடையில் 10 மணி நேரத்திற்கும் மேலாக காவல்துறையினர் தீவிராக தேடி வருகின்றனர்.

சந்தேகத்தின்பேரில் ஜார்க்கண்ட் பகுதியைச் சேர்ந்த 16 வயது இளைஞரைப் பிடித்து கொலக்கம்பை காவல் நிலையத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் மற்றும் காவல் ஆய்வாளர் பிலிப் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த இளைஞர் அந்தச்சிறுமியை வனப்பகுதிக்கு கூட்டிச் சென்றதாகவும், நீரோடை அருகி்ல் விட்டுவிட்டு வந்ததாகவும் மாறி மாறி தகவலைக் கூறி வருகிறார். இதனடிப்படையில் ஆற்றுப் பகுதியிலும், வனப்பகுதியிலும் போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். ஆனால் அந்த இளைஞன் கூறும் இடங்களில் எந்தவித தடயங்களும் கிடைக்காததால் சிறுமியைக் கண்டறிவதில் காவல்துறையினருக்கு தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் கொலக்கம்பை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கொலக்கம்பை பகுதியி்ல் தனியார் தேயிலை எஸ்டேட்டில் பணிபுரிபவர் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த லட்சுமண் ராம். இவரது 8 வயது மகளை கடந்த 2 நாட்களாக காணவில்லை. இந்நிலையில், புதன்கிழமை அவரை கிரேக்மாேர் வனப்பகுதி மற்றும் அங்குள்ள நீரோடையில் 10 மணி நேரத்திற்கும் மேலாக காவல்துறையினர் தீவிராக தேடி வருகின்றனர்.
சந்தேகத்தின்பேரில் ஜார்க்கண்ட் பகுதியைச் சேர்ந்த 16 வயது இளைஞரைப் பிடித்து கொலக்கம்பை காவல் நிலையத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் மற்றும் காவல் ஆய்வாளர் பிலிப் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த இளைஞர் அந்தச்சிறுமியை வனப்பகுதிக்கு கூட்டிச் சென்றதாகவும், நீரோடை அருகி்ல் விட்டுவிட்டு வந்ததாகவும் மாறி மாறி தகவலைக் கூறி வருகிறார். இதனடிப்படையில் ஆற்றுப் பகுதியிலும், வனப்பகுதியிலும் போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். ஆனால் அந்த இளைஞன் கூறும் இடங்களில் எந்தவித தடயங்களும் கிடைக்காததால் சிறுமியைக் கண்டறிவதில் காவல்துறையினருக்கு தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் கொலக்கம்பை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.