திருப்பூர்: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் படத்தை அரசு அலுவலகங்களில் வைக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வலியுறுத்தி அவரின் படத்தை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுக்கும் போராட்டத்தில் முக்குலத்தோர் புலிகள் கட்சியினர் ஈடுபட்டனர்.
திருப்பூர்: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் படத்தை அரசு அலுவலகங்களில் வைக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வலியுறுத்தி அவரின் படத்தை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுக்கும் போராட்டத்தில் முக்குலத்தோர் புலிகள் கட்சியினர் ஈடுபட்டனர்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சுதந்திரப் போராட்டங்களில் பங்கேற்ற நிலையில், அவரை பெருமைப்படுத்தும் விதமாக அவரின் உருவப்படத்தை அரசு அலுவலகங்களில் வைக்கலாம் என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவு தொடர்ந்து அமல்படுத்தப்படாமல் உள்ளதை கண்டித்தும், உடனடியாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் படத்தை அரசு அலுவலகங்களில் வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவுடன் சேர்த்து அவரின் படத்தையும் கொடுத்து தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சுதந்திரப் போராட்டங்களில் பங்கேற்ற நிலையில், அவரை பெருமைப்படுத்தும் விதமாக அவரின் உருவப்படத்தை அரசு அலுவலகங்களில் வைக்கலாம் என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவு தொடர்ந்து அமல்படுத்தப்படாமல் உள்ளதை கண்டித்தும், உடனடியாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் படத்தை அரசு அலுவலகங்களில் வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவுடன் சேர்த்து அவரின் படத்தையும் கொடுத்து தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர்.