விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக கோவையில் ரிலையன்ஸ் பிரஷ் பல்பொருள் அங்காடியை முற்றுகையிட்ட அனைத்திந்திய மாணவர் மற்றும் இளைஞர் பெருமன்றத்தினர் கைது!

கோவை: டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக கோவை ஹோப்காலேஜ் பகுதியில் ரிலையன்ஸ் பிரஷ் பல்பொருள் அங்காடியை முற்றுகையிட்ட அனைத்திந்திய மாணவர் மற்றும் இளைஞர் பெருமன்றத்தினர் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.


கோவை: டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக கோவை ஹோப்காலேஜ் பகுதியில் ரிலையன்ஸ் பிரஷ் பல்பொருள் அங்காடியை முற்றுகையிட்ட அனைத்திந்திய மாணவர் மற்றும் இளைஞர் பெருமன்றத்தினர் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.



வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி, டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக, கோவை ஹோப் காலேஜ் பகுதியில் அனைத்திந்திய மாணவர் மற்றும் இளைஞர் பெருமன்றத்தினர் ரிலையன்ஸ் பிரஷ் பல்பொருள் அங்காடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஊர்வலமாக வந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.



மேலும் சாலையில் அமர்ந்து மறியலிலும் ஈடுபட்டனர். அவ்வமைப்பின் நிர்வாகிகளை முன்னெச்சரிக்கையாக வீடுகளில் கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



இதையடுத்து, 100க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை தரதரவென இழுத்துச் சென்று காவல் துறையினர் கைது செய்தனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...