அரசு வழிகாட்டுதலின்படி கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும் - கோவை திருமண்டல பேராயர் திருத்தி ரவீந்தர் தகவல்!

கோவை: அரசு வழிகாட்டுதலின்படி கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும் என்று கோவை திருமண்டல பேராயர் திமோத்தி ரவீந்தர் தெரிவித்தார்.


கோவை: அரசு வழிகாட்டுதலின்படி கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும் என்று கோவை திருமண்டல பேராயர் திமோத்தி ரவீந்தர் தெரிவித்தார்.

கோவை பந்தய சாலை சி.எஸ்.ஐ திருமண்டல அலுவலகத்தில் கோவை மாவட்ட பேராயர் திமோத்தி ரவீந்தர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், அரசு வழிகாட்டுதலின்படி கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும் எனவும் 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் தென்னிந்திய திருச்சபை நிதி பற்றாக்குறை ஏற்பட்ட போதும் பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டதாகத் தெரிவித்த அவர், எட்டு மாவட்டத்தில் 60,000 பேருக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், கொரோனா காலகட்டத்தில் முன்கள பணியாளர்கள் பணி பாராட்டப்பட வேண்டிய ஒன்று எனவும் இதில் பத்திரிகையாளரின் பங்கு மிக முக்கியமானது என்றார். தென்னிந்திய திருச்சபை ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு செய்யப்பட்டு உள்ளது எனவும் இதில் பலர் பயனடைந்து உள்ளனர் என கூறியவர், திருச்சபை மூலம் நடத்தப்படும் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு 20% முதல் 75% வரை விலக்கு அளிக்கபட்டத்காக கூறினார்.

இந்தியா வல்லரசு ஆக அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்த அவர், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு எவ்வாறு உதவ முடியும் என ஆலோசனை செய்து வருவதாக தெரிவித்தார்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...