நீலகிரி: நீலகிரியில் லாரி மற்றும் பிக்கப் வாகன ஓட்டுனர்கள் வரும் 27ம் தேதி முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
நீலகிரி: நீலகிரியில் லாரி மற்றும் பிக்கப் வாகன ஓட்டுனர்கள் வரும் 27ம் தேதி முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.

கொரோனா கால காலாண்டு வரியை ரத்து செய்ய வேண்டும், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும், ஆன்லைன் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும், வேகக் கட்டுப்பாட்டு கருவி மற்றும் ஸ்டிக்கர்களை குறிப்பட்ட சில நிறுவனத்திடம் இருந்து மட்டும் வாங்க வேண்டும் என்ற வாய் மொழி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் நீலகிரியில் இயங்கும் 6 ஆயிரம் சரக்கு வாகனங்கள் பங்கேற்கவுள்ளதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்த கூட்டத்தில் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் நடராஜ், குன்னூர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் ஈஸ்வரன், செயலாளர் கணேச மூர்த்தி, மார்க்கெட் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கொரோனா கால காலாண்டு வரியை ரத்து செய்ய வேண்டும், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும், ஆன்லைன் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும், வேகக் கட்டுப்பாட்டு கருவி மற்றும் ஸ்டிக்கர்களை குறிப்பட்ட சில நிறுவனத்திடம் இருந்து மட்டும் வாங்க வேண்டும் என்ற வாய் மொழி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் நீலகிரியில் இயங்கும் 6 ஆயிரம் சரக்கு வாகனங்கள் பங்கேற்கவுள்ளதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்த கூட்டத்தில் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் நடராஜ், குன்னூர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் ஈஸ்வரன், செயலாளர் கணேச மூர்த்தி, மார்க்கெட் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.