நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் முதன்முறையாக`அம்மா மினி கிளினிக்' திட்டத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் முதன்முறையாக`அம்மா மினி கிளினிக்' திட்டத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
தமிழக மக்களின் அடிப்படை மருத்துவ தேவைகளை பூர்த்திசெய்ய தமிழகம் முழுவதும் அம்மா மினி கிளினிக் ஏற்படுத்தப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். அத்துடன் பல இடங்களில் அம்மா மினி கிளினிக்குகளை திறந்து வைத்துள்ளார்.

இதன் ஒரு கட்டமாக நீலகிரி மாவட்டத்தில் முதல்முறையாக ஜெகதளா கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இந்த கிளினிக்கைத் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசும்போது, `இந்த அம்மா மினி கிளினிக்கில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதாரப் பணியாளர் இருப்பர். அங்கு மருத்துவ உபகரணங்களும் இருக்கும். சளி, காய்ச்சல், தலைவலிக்கு சிகிச்சை அளிக்கவும், சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் உள்ள நோயாளிகளுக்கு மாதாந்திர மருந்துகள் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
மேலும் அவர், `அம்மா மினி கிளினிக்' காலை 8 மணி முதல் 12 வரையும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையும் மினிகிளினிக்குகள் செயல்படும். நீலகிரி மாவட்டத்தில் கிராமப் பகுதிகளுக்கு 20 கிளினிக்குகளும், நகரப் பகுதிகளுக்கு 5 கிளினிக்குகளும், 3 நடமாடும் கிளினிக்குகளும் மொத்தம் 28 மினி கிளினிக்குகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்நிகழ்சியில் குன்னூர் சட்டப்பேரவை உறுப்பினர் சாந்தி ராமு, மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கப்பச்சி விநோத், குன்னூர் கோட்டாட்சியர் ரஞ்ஜித் சிங், மருத்துவ துணை இயக்குனர் பாலுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கர்ப்பிணி பெண்களுக்கு 2,000 ரூபாய் மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
தமிழக மக்களின் அடிப்படை மருத்துவ தேவைகளை பூர்த்திசெய்ய தமிழகம் முழுவதும் அம்மா மினி கிளினிக் ஏற்படுத்தப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். அத்துடன் பல இடங்களில் அம்மா மினி கிளினிக்குகளை திறந்து வைத்துள்ளார்.
இதன் ஒரு கட்டமாக நீலகிரி மாவட்டத்தில் முதல்முறையாக ஜெகதளா கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இந்த கிளினிக்கைத் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசும்போது, `இந்த அம்மா மினி கிளினிக்கில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதாரப் பணியாளர் இருப்பர். அங்கு மருத்துவ உபகரணங்களும் இருக்கும். சளி, காய்ச்சல், தலைவலிக்கு சிகிச்சை அளிக்கவும், சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் உள்ள நோயாளிகளுக்கு மாதாந்திர மருந்துகள் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
மேலும் அவர், `அம்மா மினி கிளினிக்' காலை 8 மணி முதல் 12 வரையும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையும் மினிகிளினிக்குகள் செயல்படும். நீலகிரி மாவட்டத்தில் கிராமப் பகுதிகளுக்கு 20 கிளினிக்குகளும், நகரப் பகுதிகளுக்கு 5 கிளினிக்குகளும், 3 நடமாடும் கிளினிக்குகளும் மொத்தம் 28 மினி கிளினிக்குகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்நிகழ்சியில் குன்னூர் சட்டப்பேரவை உறுப்பினர் சாந்தி ராமு, மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கப்பச்சி விநோத், குன்னூர் கோட்டாட்சியர் ரஞ்ஜித் சிங், மருத்துவ துணை இயக்குனர் பாலுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கர்ப்பிணி பெண்களுக்கு 2,000 ரூபாய் மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.