பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை வட்டாரப் பகுதிகளில் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி சட்டவிரோதமாக கடத்தப்படுவதாக பொள்ளாச்சி சார் ஆட்சியருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து ஆனைமலை வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில், ஆனைமலை உள்வட்ட வருவாய் ஆய்வாளர், கோட்டூர் உள்வட்ட வருவாய் ஆய்வாளர் ஆகியோர் இன்று அதிகாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கோட்டூர் பகுதியில் கேரளாவை நோக்கி நான்கு சக்கர வாகனம் ஒன்று சென்றது.
வாகனத்தை நிறுத்தியபோது ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தாமல் சென்றார். சிறிது தூரம் துரத்திச் சென்று வாகனத்தை வழிமறித்தபோது ஓட்டுனர் தப்பிச் சென்று விட்டார். வாகனத்தை சோதனை செய்ததில் அதில் சுமார் 3 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. அரிசி மூட்டைகள் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்து ஆனைமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை வட்டாரப் பகுதிகளில் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி சட்டவிரோதமாக கடத்தப்படுவதாக பொள்ளாச்சி சார் ஆட்சியருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து ஆனைமலை வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில், ஆனைமலை உள்வட்ட வருவாய் ஆய்வாளர், கோட்டூர் உள்வட்ட வருவாய் ஆய்வாளர் ஆகியோர் இன்று அதிகாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கோட்டூர் பகுதியில் கேரளாவை நோக்கி நான்கு சக்கர வாகனம் ஒன்று சென்றது.
வாகனத்தை நிறுத்தியபோது ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தாமல் சென்றார். சிறிது தூரம் துரத்திச் சென்று வாகனத்தை வழிமறித்தபோது ஓட்டுனர் தப்பிச் சென்று விட்டார். வாகனத்தை சோதனை செய்ததில் அதில் சுமார் 3 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. அரிசி மூட்டைகள் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்து ஆனைமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.