யானை தாக்கியதில் காயமடைந்த ஊழியருக்கு வனஅதிகாரி ஆறுதல்!

கோவை: யானை பராமரித்து வந்த ஊழியரை யானை தள்ளியதில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவருக்கு வனச்சரகர் ஆறுதல் கூறினார்.

கோவை: யானை பராமரித்து வந்த ஊழியரை யானை தள்ளியதில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவருக்கு வனச்சரகர் ஆறுதல் கூறினார்.

உலாந்தி வனச்சரகம் கோழிகமுத்தி யானைகள் முகாமில் உள்ள மாரியப்பன் என்ற யானையை மணிகண்டன் என்ற ஊழியர் கடந்த வாரம் மேய்ச்சலுக்காக வனப்பகுதிக்குள் அழைத்துச் சென்றார்.

அப்போது திடீரென யானை தள்ளியதில் கீழே விழுந்த அவரது இடது கை தோள்பட்டைப் பகுதியில் மணிகண்டனுக்கு உள்காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை அம்பராம்பாளையத்தில் உள்ள ஆல்வா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை முடித்து அன்றே பணிக்குத் திரும்பினார். 

இதையடுத்து கோழிகமுத்தி திரும்பிய அவர் யானைக்கு மாலை உணவளித்து பணி மேற்கொண்டார். இந்நிலையில் தற்போது விழுந்ததில் கையில் மீண்டும் வலி எடுப்பதாக கூறி விடுப்பில் சென்று பொள்ளாச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உலாந்தி வனச்சரக அலுவலர் மருத்துவமனை சென்று மணிகண்டனைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...