கோவை: கோவையில் கஞ்சாவைப் பதுக்கி வைத்து மாணவர்கள், இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்தரை போலீசார் சுற்றிவளைத்துப் பிடித்து சிறையில் அடைத்தனர்.
கோவை: கோவையில் கஞ்சாவைப் பதுக்கி வைத்து மாணவர்கள், இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்தரை போலீசார் சுற்றிவளைத்துப் பிடித்து சிறையில் அடைத்தனர்.
கோவை பூசாரிபாளையம் பகுதியில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை நடப்பதாக செல்வபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள கோவில் அருகே கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட செட்டி வீதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (வயது 28) என்பவரை நேற்று கைது செய்தனர். இதையடுத்து அவரை சிறையில் அடைத்ததுடன் அவரிடமிருந்து இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை பூசாரிபாளையம் பகுதியில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை நடப்பதாக செல்வபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள கோவில் அருகே கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட செட்டி வீதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (வயது 28) என்பவரை நேற்று கைது செய்தனர். இதையடுத்து அவரை சிறையில் அடைத்ததுடன் அவரிடமிருந்து இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.