திருப்பூர்: திருப்பூரில் மாநகராட்சி வார்டு பகுதிகளில் அடிப்படை வசதிகளை சரி செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: திருப்பூரில் மாநகராட்சி வார்டு பகுதிகளில் அடிப்படை வசதிகளை சரி செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகர் பகுதிகளில் இருக்கக்கூடிய மூகாம்பிகை நகர், அமராவதி நகர், குமரன் நகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்கி வீதி முழுவதும் குட்டை போல காட்சி தருவதாக கூறியும், 15 நாட்களுக்கு ஒரு முறைதான் மாநகராட்சி குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாகவும் வள்ளலார் நகர் முதல் மூகாம்பிகை நகர் குப்பைகள் தேங்கி இருப்பதாக கூறியும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஆட்சியரிடம் மனு கொடுத்த பிறகும் குறைகள் சரிசெய்யப்படவில்லை எனில், அடுத்தகட்ட போராட்டமாக சாலை மறியலில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர்.
திருப்பூர் மாநகர் பகுதிகளில் இருக்கக்கூடிய மூகாம்பிகை நகர், அமராவதி நகர், குமரன் நகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்கி வீதி முழுவதும் குட்டை போல காட்சி தருவதாக கூறியும், 15 நாட்களுக்கு ஒரு முறைதான் மாநகராட்சி குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாகவும் வள்ளலார் நகர் முதல் மூகாம்பிகை நகர் குப்பைகள் தேங்கி இருப்பதாக கூறியும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஆட்சியரிடம் மனு கொடுத்த பிறகும் குறைகள் சரிசெய்யப்படவில்லை எனில், அடுத்தகட்ட போராட்டமாக சாலை மறியலில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர்.