கோவை: கோவை செல்வபுரம் அருகே உள்ள முத்துசாமி காலனியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் ஜெகநாதன் (வயது 32). இவர் பெங்களூரில் உள்ள ஒரு ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். தற்போது கொரோனா பரவல் காரணமாக வீட்டிலிருந்து வேலை பார்த்து வந்தார்.
கோவை: கோவை செல்வபுரம் அருகே உள்ள முத்துசாமி காலனியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் ஜெகநாதன் (வயது 32). இவர் பெங்களூரில் உள்ள ஒரு ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். தற்போது கொரோனா பரவல் காரணமாக வீட்டிலிருந்து வேலை பார்த்து வந்தார்.
நேற்று வீட்டிலுள்ள அறையில் வேலை செய்து கொண்டிருந்த ஜெகநாதன் திடீரென்று விஷம் குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கிச் சரிந்தார். இதைப் பார்த்ததும் வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐ.டி ஊழியர் ஜெகநாதன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது சாவுக்கு காதல் தோல்வியா? மன உளைச்சலா? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று வீட்டிலுள்ள அறையில் வேலை செய்து கொண்டிருந்த ஜெகநாதன் திடீரென்று விஷம் குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கிச் சரிந்தார். இதைப் பார்த்ததும் வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐ.டி ஊழியர் ஜெகநாதன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது சாவுக்கு காதல் தோல்வியா? மன உளைச்சலா? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.