கோவையில் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், வீட்டுமனை வேண்டி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு!

கோவை: கோவையில் வீட்டு மனை வேண்டியும் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும் 200க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: கோவையில் வீட்டு மனை வேண்டியும் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும் 200க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் திரண்டு வீடற்ற ஏழை மக்களுக்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூகம் இலவச வீட்டு மனை ஒதுக்கித் தர வேண்டியும், சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.



அப்போது, மத்திய அரசு உடனடியாக சிலிண்டர் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் தங்களது கோரிக்கைகளை பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.



அதனை தொடர்ந்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், வீடற்ற ஏழை மக்களுக்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்படும் வீடுகளில் இலவச வீடு ஒதுக்கித் தருமாறு 300 மனுக்களை அளித்தனர். சுமார் 200க்கும் மேற்பட்ட மகளிர் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...