திருப்பூர்: மின்வாரிய பணிகளை தனியாருக்கு வழங்கும் நடவடிக்கை கைவிட வலியுறுத்தி திருப்பூர் மின் வாரிய அலுவலகத்தில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர்: மின்வாரிய பணிகளை தனியாருக்கு வழங்கும் நடவடிக்கை கைவிட வலியுறுத்தி திருப்பூர் மின் வாரிய அலுவலகத்தில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மின்சார வாரியத்தின் கீழ் உள்ள பல்வேறு பணிகளை தனியாருக்கு வழங்கும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும், மின்வாரியத்தில் பல ஆண்டுகளாக ஒப்பந்தப் பணியாளராக பணியாற்றி வருபவர்களை நிரந்தர தொழிலாளர்களாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் என 500க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்ற சூழ்நிலையில் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் மின்வாரிய ஊழியர்கள் தெரிவித்தனர்.
மின்சார வாரியத்தின் கீழ் உள்ள பல்வேறு பணிகளை தனியாருக்கு வழங்கும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும், மின்வாரியத்தில் பல ஆண்டுகளாக ஒப்பந்தப் பணியாளராக பணியாற்றி வருபவர்களை நிரந்தர தொழிலாளர்களாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் என 500க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்ற சூழ்நிலையில் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் மின்வாரிய ஊழியர்கள் தெரிவித்தனர்.