மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்!

கோவை: மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையை 5000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: மாற்று திறனாளிகளுக்கான உதவித் தொகையை 5000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் ஊன்றுகோல் அறக்கட்டளை சார்பில் 30க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகையாக வழங்கப்படும் ஆயிரம் ரூபாயை 5000 ரூபாயாக உயர்த்தித் தர வேண்டும் எனவும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்றும், அரசு வேலைகள் வழங்கிட வேண்டும் என்றும் முழக்கங்களை எழுப்பினர்.



இது குறித்து ஊன்றுகோல் அறக்கட்டளை நிறுவனர் கருணாகரன் கூறுகையில், "இந்த ஆர்ப்பாட்டத்தில் சேலம், நாமக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து வந்திருப்பதாகவும் தங்களுக்கு அரசு தற்போது வழங்கி வரும் உதவித்தொகை 1000 ரூபாயை 5000 மாக உயர்த்தி தர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதேபோல, இலவச வீட்டுமனை பட்டாவிற்கு ஒன்றரை லட்சம் கேட்பதாகவும் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். விளையாட்டுத் துறையில் சாதித்தவர்களுக்கு இன்னும் அரசு வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு கிடைக்கப் பெறவில்லை என்றார்.



மேலும், செப்டம்பர் 22ம் தேதியன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க சென்ற போது வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தோம். ஆனால், மனு அளித்து இரண்டு மாதங்களாகியும் எவ்வித பதிலும் இல்லை. எனவே, அரசு உடனடியாக எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தரவேண்டும்," என்றார்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...