கோவை: கோவை மாங்கரை அருகே கருங்கல் ஏற்றிச் சென்ற லாரி மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுனர் உயிர் தப்பினார்.
கோவை: கோவை மாங்கரை அருகே கருங்கல் ஏற்றிச் சென்ற லாரி மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுனர் உயிர் தப்பினார்.

கோவையில் இருந்து கருங்கல் ஏற்றி கொண்டு ஆனைக்கட்டி சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி மாங்கரை அடுத்த மலைப்பாதையில் சென்ற போது எதிரே வந்த கார் மீது மோதாமல் இருக்க லாரின் ஓட்டுநர் லாரியை இடது புறமாக திருப்பி உள்ளார்.
அப்போது, எதிர்பாராத விதமாக சாலையின் ஓரத்தில் உள்ள பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உயிர் தப்பிய நிலையில், லாரி பள்ளத்தில் சிக்கியது.
இதையடுத்து, பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளத்தில் விழுந்த லாரி மீட்கப்பட்டது. இந்த விபத்து காரணமாக ஆனைகட்டி பாதையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதனிடையே, மலைப்பாதையின் ஓரத்தில் போடப்படும் பாதுகாப்பு தடுப்பு இல்லாததால் விபத்துகள் ஏற்படுவதாகவும் மாங்கரையில் இருந்து ஆனைக்கட்டி வரை சாலையின் ஓரத்தில் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.