கேஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து ஜனநாயக மாதர் சங்கம் ஒப்பாரி!

கோவை: கேஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஒப்பாரிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: கேஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஒப்பாரிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அனைத்து மக்களின் அத்தியாவசியத் தேவையாக எரிபொருள்கள் உள்ள நிலையில் மத்திய அரசு கேஸ் சிலிண்டரின் விலையை உயர்த்தி உள்ளது. இதனால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மானியத்தை விட்டுத் தர மத்திய அரசு கேட்டுக் கொண்டதையடுத்து சிலர் அதனை விட்டுக் கொடுத்தனர். 

இந்நிலையில் மற்றவர்களுக்கு வங்கிகளில் மானியத் தொகை செலுத்தப்பட்டு வந்தது. ஆனால், தற்போது அதனை மத்திய அரசு நிறுத்திவிட்டது. ஒரு சிலிண்டரின் விலை 700 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் ஒரு மாத காலத்தில் மத்திய அரசு 100 ரூபாய் உயர்த்தி உள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். 

மத்திய அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் நேற்று இரவு கோவை ஆவாரம்பாளையம் பகுதி நேதாஜி நகர் பகுதியில் கேஸ் சிலிண்டர்களுக்கு மாலை அணிவித்தும் விறகு அடுப்பு எரித்தும் ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட பொருளாளர் ஜோதிமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஒப்பாரிப் போராட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...