வால்பாறையில் அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் சார்பில் கொராேனா விழிப்புணர்வு பிரச்சாரம்!

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் கல்லூரி மாணவர்கள் சார்பில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் கல்லூரி மாணவர்கள் சார்பில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரி வளாகத்தின் முன்புறம் புறப்பட்ட கல்லூரி மாணவர்களின் கொராேனா விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை வால்பாறை நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஜான்சன் கல்லூரி முதல்வர் முரளிதரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த பிரச்சாரத்தில் கல்லூரி மாணவர்கள், தேசிய மாணவர் படையினர், மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் கலந்து கொண்டு பேருந்து நிலையம் தேநீர் கடைகள், வளாகங்கள் ஆகிய இடங்களில் உள்ள பொதுமக்களிடம் முக கவசம் அணிவதை வலியுறுத்தியும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வலியுறுத்தியும் அறிவுறுத்தினர்.

மேலும், முகக்கவசம் அணியாதவர்களுக்கு இலவசமாக முக கவசம் அளித்து அணிய வைத்தனர்.

இந்நிகழ்வில் வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் முரளீதரன், வால்பாறை நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஜான்சன் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பெரியசாமி, பேராசிரியர்கள் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...