கோவை: கண் அறுவை சிகிச்சை செய்துகொண்ட மூதாட்டி கிணற்றில் தவறி விழுந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
கோவை: கண் அறுவை சிகிச்சை செய்துகொண்ட மூதாட்டி கிணற்றில் தவறி விழுந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
ஆலந்துறை அருகே உள்ள நாதே கவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனி அம்மாள் (வயது 70). சரியாக பார்வை தெரியாத இவர் 20 நாட்களுக்கு முன்பு மருத்துவமனைக்குச் சென்று கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
நேற்று முன்தினம் இவர் தனது வீட்டின் அருகே நடந்து சென்றபோது அருகே இருந்த கிணற்றில் தவறி விழுந்ததில் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலந்துறை அருகே உள்ள நாதே கவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனி அம்மாள் (வயது 70). சரியாக பார்வை தெரியாத இவர் 20 நாட்களுக்கு முன்பு மருத்துவமனைக்குச் சென்று கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
நேற்று முன்தினம் இவர் தனது வீட்டின் அருகே நடந்து சென்றபோது அருகே இருந்த கிணற்றில் தவறி விழுந்ததில் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.