தரமற்ற கையுறை தயாரித்து 98 லட்சம் மோசடி: பெண் உள்பட 2 பேர் கைது!

கோவை: தரமற்ற கையுறை தயாரித்ததுடன் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட கையுறைகளை கொடுத்து ரூ. 98 லட்சம் மோசடி செய்த பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.



கோவை: தரமற்ற கையுறை தயாரித்ததுடன் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட கையுறைகளை கொடுத்து ரூ. 98 லட்சம் மோசடி செய்த பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் ஒன்று தனியார் மருத்துவமனைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு பாதுகாப்பு கையுறை வழங்கி வந்தது. இதற்காக கோவை கவுண்டம்பாளையத்தில் இயங்கிவரும் புளு ஹர்ச்சிட்ஸ் நிறுவனத்திடம் கடந்த மே மாதம் 98 லட்சம் ரூபாய்க்கு தவணை முறையில் கையுறை வாங்கியது.

இந்நிலையில் அந்த கையுறைகள் அனைத்தும் சேதமடைந்திருந்தது தெரியவந்தது. மேலும் அவற்றை பரிசோதித்துப் பார்த்ததில் அவை ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட கையுறைகள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரோஹித் என்பவர் புளு ஹர்ச்சிட்ஸ் நிறுவனத்தை நடத்திவரும் கீதா அகர்வாலிடம் தங்கள் நிறுவனம் அளித்த ரூபாய் 98 லட்சத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு எந்த பதிலும் அளிக்காததால் கீதா அகர்வால் மற்றும் அவரின் கூட்டாளி பாலாஜி என்பவர் மீது கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசாரிடம் ரோகித் புகார் அளித்தார்.

வழக்கை விசாரித்த உதவி ஆணையர் உத்தரவின்பேரில் அப்பாதுரை கீதா அகர்வால் மற்றும் பாலாஜியை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற நபர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...