திருப்பூர் மங்கலம் பகுதியில் சேறும் சகதியுமாக காணப்படும் சாலைகளில் திமுகவினர் நாற்று நட்டு நூதன ஆர்ப்பாட்டம்!

திருப்பூர்: திருப்பூர் மங்கலம் சாலையில் மிகவும் மோசமடைந்து காணப்பட்ட சாலையில் முன்னாள் அமைச்சர் சாமிநாதன் தலைமையில் திமுகவினர் நாற்று நட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மங்கலம் சாலையில் மிகவும் மோசமடைந்து காணப்பட்ட சாலையில் முன்னாள் அமைச்சர் சாமிநாதன் தலைமையில் திமுகவினர் நாற்று நட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 39வது வார்டு ஆண்டிபாளையம் பிரிவிலிருந்து சின்னாண்டிபாளையம் பிரிவு வரை பாதாள சாக்கடை குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழிகள் ஒரு வருடமாகியும் சரிவர மூடாததால் அப்பகுதி முழுவதும் சேறும் சகதியுமாக காணப்படுகிறது.

இந்த சாலை திருப்பூரிலிருந்து மங்கலம் வழியாக பல்லடம் மற்றும் கோவை செல்வதற்கு பிரதான சாலையாக இருந்து வரக்கூடிய சூழ்நிலையில், இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக மாநகராட்சி நிர்வாகத்திடம் தெரியப்படுத்தியும் நடவடிக்கை எடுக்காததை சுட்டிக்காட்டி இன்று திமுக சார்பில் குளத்துப்புதூர் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் சாமிநாதன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.



மேலும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டிக்கும் வகையில் சேறும் சகதியுமான சாலையில் திமுகவினர் நாற்று நட்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சாமிநாதன், ஆமை வேகத்தைக் காட்டிலும் மெதுவாக பணிகள் நடந்து வருவதாகவும் இதை போர்க்கால அடிப்படையில் செய்யாவிடில் தலைமை கழகத்தின் உத்தரவைப் பெற்று மிகப்பெரிய போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...