கோவை: மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்ற பெண் போலீஸ் அதிகாரிக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு தப்பிச்சென்ற கைதி மீண்டும் சிக்கினான்.
கோவை: மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்ற பெண் போலீஸ் அதிகாரிக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு தப்பிச்சென்ற கைதி மீண்டும் சிக்கினான்.
கோவை ரத்தினபுரி தயிர் இட்டேரியைச் சேர்ந்தவர் பிரபு (வயது 20). இவர் மீது வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை கடந்த 11-ஆம் தேதி போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து பிரபுவை அவிநாசி கிளைச் சிறையில் அடைக்க இருந்தனர்.
அவிநாசி சிறையில் அடைப்பதற்குமுன் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டுமென்பதற்காக பிரபுவை சப்-இன்ஸ்பெக்டர் ரேவதி கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். கோவை அரசு மருத்துவமனை வளாகத்தைச் சென்றடைந்ததும் வாகனத்திலிருந்து இறங்கிய கொள்ளையன் பிரபு சப் இன்ஸ்பெக்டர் ரேவதிக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு அவரைத் தள்ளிவிட்டு தப்பி ஓடிவிட்டான்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையனை தேடிவந்தனர். தப்பி ஓடிய கொள்ளையன் பிரபு ஓசூரில் பதுங்கி இருப்பதாக தகவல் வரவே போலீசார் அங்கு விரைந்து சென்று கைது செய்தனர். பின்னர் அவனை கோவைக்கு அழைத்து வந்து சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை ரத்தினபுரி தயிர் இட்டேரியைச் சேர்ந்தவர் பிரபு (வயது 20). இவர் மீது வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை கடந்த 11-ஆம் தேதி போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து பிரபுவை அவிநாசி கிளைச் சிறையில் அடைக்க இருந்தனர்.
அவிநாசி சிறையில் அடைப்பதற்குமுன் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டுமென்பதற்காக பிரபுவை சப்-இன்ஸ்பெக்டர் ரேவதி கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். கோவை அரசு மருத்துவமனை வளாகத்தைச் சென்றடைந்ததும் வாகனத்திலிருந்து இறங்கிய கொள்ளையன் பிரபு சப் இன்ஸ்பெக்டர் ரேவதிக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு அவரைத் தள்ளிவிட்டு தப்பி ஓடிவிட்டான்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையனை தேடிவந்தனர். தப்பி ஓடிய கொள்ளையன் பிரபு ஓசூரில் பதுங்கி இருப்பதாக தகவல் வரவே போலீசார் அங்கு விரைந்து சென்று கைது செய்தனர். பின்னர் அவனை கோவைக்கு அழைத்து வந்து சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.