பெண் போலீஸ் அதிகாரிக்கு டிமிக்கி கொடுத்து தப்பிய கைதி சிக்கினான்!

கோவை: மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்ற பெண் போலீஸ் அதிகாரிக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு தப்பிச்சென்ற கைதி மீண்டும் சிக்கினான்.


கோவை: மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்ற பெண் போலீஸ் அதிகாரிக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு தப்பிச்சென்ற கைதி மீண்டும் சிக்கினான்.

கோவை ரத்தினபுரி தயிர் இட்டேரியைச் சேர்ந்தவர் பிரபு (வயது 20). இவர் மீது வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை கடந்த 11-ஆம் தேதி போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து பிரபுவை அவிநாசி கிளைச் சிறையில் அடைக்க இருந்தனர்.

அவிநாசி சிறையில் அடைப்பதற்குமுன் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டுமென்பதற்காக பிரபுவை சப்-இன்ஸ்பெக்டர் ரேவதி கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். கோவை அரசு மருத்துவமனை வளாகத்தைச் சென்றடைந்ததும் வாகனத்திலிருந்து இறங்கிய கொள்ளையன் பிரபு சப் இன்ஸ்பெக்டர் ரேவதிக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு அவரைத் தள்ளிவிட்டு தப்பி ஓடிவிட்டான்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையனை தேடிவந்தனர். தப்பி ஓடிய கொள்ளையன் பிரபு ஓசூரில் பதுங்கி இருப்பதாக தகவல் வரவே போலீசார் அங்கு விரைந்து சென்று கைது செய்தனர். பின்னர் அவனை கோவைக்கு அழைத்து வந்து சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...