கோவை: பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 1200 கிலோ தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்த போலீசார், ரூ 25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
கோவை: பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 1200 கிலோ தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்த போலீசார், ரூ 25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள் பயன்பாடு மீண்டும் பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில் அதிகரித்துள்ளது. இதனால், பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட கடை வீதி, காந்தி மண்டபம், கோட்டூர் ரோடு மற்றும் சத்திரம் வீதி ஆகிய பகுதிகளில் உள்ள 40க்கு மேற்பட்ட பிளாஸ்டிக் கடைகளில் டாக்டர் ராம்குமார் நகர் நல அலுவலர் மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள் திடீர் ஆய்வு நடத்தப்பட்டது.
அப்போது, கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, தடை செய்யப்பட்ட 1200கிலோ பாலிதீன் பொருட்களை பறிமுதல் செய்த நகர் நல அலுவலர் 25 ஆயிரத்து ரூபாய் அபராதம் விதித்தார்.
மேலும், பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை தொடரும் என்று நகர் நல அலுவலர் டாக்டர் ராம்குமார் தெரிவித்தார்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள் பயன்பாடு மீண்டும் பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில் அதிகரித்துள்ளது. இதனால், பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட கடை வீதி, காந்தி மண்டபம், கோட்டூர் ரோடு மற்றும் சத்திரம் வீதி ஆகிய பகுதிகளில் உள்ள 40க்கு மேற்பட்ட பிளாஸ்டிக் கடைகளில் டாக்டர் ராம்குமார் நகர் நல அலுவலர் மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள் திடீர் ஆய்வு நடத்தப்பட்டது.
அப்போது, கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, தடை செய்யப்பட்ட 1200கிலோ பாலிதீன் பொருட்களை பறிமுதல் செய்த நகர் நல அலுவலர் 25 ஆயிரத்து ரூபாய் அபராதம் விதித்தார்.
மேலும், பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை தொடரும் என்று நகர் நல அலுவலர் டாக்டர் ராம்குமார் தெரிவித்தார்.