திருப்பூர்: திருப்பூரில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அரசு மதுபானக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: திருப்பூரில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அரசு மதுபானக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 18வது வார்டு வாவிபாளையம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட அரசு மதுபான கடைக்கு பொதுமக்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

இந்த நிலையில், மாவட்ட நிர்வாகத்துடன் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் கடையை மாற்ற நிர்வாகம் ஒப்புக்கொண்ட நிலையில், அதற்கு அத்துமீறி தொடர்ந்து கடை செயல்பட்டு வருவதாகவும் உடனடியாக கடையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி இன்று வாவிபாளையத்தில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கையில் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 18வது வார்டு வாவிபாளையம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட அரசு மதுபான கடைக்கு பொதுமக்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
இந்த நிலையில், மாவட்ட நிர்வாகத்துடன் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் கடையை மாற்ற நிர்வாகம் ஒப்புக்கொண்ட நிலையில், அதற்கு அத்துமீறி தொடர்ந்து கடை செயல்பட்டு வருவதாகவும் உடனடியாக கடையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி இன்று வாவிபாளையத்தில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கையில் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.