கோவை: தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோரின் இட ஒதுக்கீட்டையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் பொருட்டு 143 பிற்படுத்தப்பட்ட சமுதாயங்கள் இணைந்து புதிய கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளன.
கோவை: தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோரின் இட ஒதுக்கீட்டையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் பொருட்டு 143 பிற்படுத்தப்பட்ட சமுதாயங்கள் இணைந்து புதிய கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளன.
முன்னாள் காவல் துறையினர், முன்னாள் அரசு அதிகாரிகள், வழக்குரைஞர்கள் மற்றும் சமுதாய தலைவர்கள் ஒன்றிணைந்து பிற்படுத்தப்பட்டோர் உரிமைக்கான கூட்டமைப்பு என்ற அமைப்பை துவங்கியுள்ளனர்.
இதற்கான செய்தியாளர் சந்திப்பு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் இன்று நடைபெற்றது. அப்போது கூட்டமைப்பைச் சேர்ந்தவரும், முன்னாள் காவல்துறை அதிகாரியுமான ரத்தினசபாபதி பேசுகையில், தமிழகத்தில் 143 சமூகத்தினர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக உள்ளதாகவும்
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் அவர்களுக்கான உரிமைகளை இழந்து வருகின்றனர் என்றார்.
இதுவரை எந்த அமைப்பும் இழந்த உரிமையை மீட்டெடுக்க குரல் கொடுக்கவில்லை எனவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்பதால் இளைஞர்கள், மாணவர்கள் அவர்களுக்கான உரிமையை இழந்துவிடுவதால் இந்த அமைப்பை உருவாக்கியுள்ளதாக தெரிவித்த அவர், இந்த அமைப்பு முற்றிலும் அரசியல் சார்பு இல்லாத அமைப்பு எனவும் 143 சமுதாயத்தின் ஒரே குரலாக இந்த அமைப்பு இருக்கும் எனவும் எவ்வித கருத்து வேற்றுமைக்கும் இடமின்றி இந்த அமைப்பினர் உழைப்பார்கள் என தெரிவித்தார்.
மேலும், இட ஒதுக்கீட்டைத் தாண்டி பல சமூகத்திற்கு பாதுகாப்பு தேவைப்படுவதாகவும் இந்த அமைப்பு அரசியல் கட்சியாக மாறுவதற்கு வாய்ப்புகள் இல்லை என்றார். பிற்படுத்தப்பட்ட அனைத்து வகுப்பினரையும் ஒன்றிணைத்து முதல் கூட்டம் வரும் 18ம் தேதி கோவையில் நடத்த உள்ளதாகவும் இதில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வுகளை ஏற்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னாள் காவல் துறையினர், முன்னாள் அரசு அதிகாரிகள், வழக்குரைஞர்கள் மற்றும் சமுதாய தலைவர்கள் ஒன்றிணைந்து பிற்படுத்தப்பட்டோர் உரிமைக்கான கூட்டமைப்பு என்ற அமைப்பை துவங்கியுள்ளனர்.
இதற்கான செய்தியாளர் சந்திப்பு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் இன்று நடைபெற்றது. அப்போது கூட்டமைப்பைச் சேர்ந்தவரும், முன்னாள் காவல்துறை அதிகாரியுமான ரத்தினசபாபதி பேசுகையில், தமிழகத்தில் 143 சமூகத்தினர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக உள்ளதாகவும்
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் அவர்களுக்கான உரிமைகளை இழந்து வருகின்றனர் என்றார்.
இதுவரை எந்த அமைப்பும் இழந்த உரிமையை மீட்டெடுக்க குரல் கொடுக்கவில்லை எனவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்பதால் இளைஞர்கள், மாணவர்கள் அவர்களுக்கான உரிமையை இழந்துவிடுவதால் இந்த அமைப்பை உருவாக்கியுள்ளதாக தெரிவித்த அவர், இந்த அமைப்பு முற்றிலும் அரசியல் சார்பு இல்லாத அமைப்பு எனவும் 143 சமுதாயத்தின் ஒரே குரலாக இந்த அமைப்பு இருக்கும் எனவும் எவ்வித கருத்து வேற்றுமைக்கும் இடமின்றி இந்த அமைப்பினர் உழைப்பார்கள் என தெரிவித்தார்.
மேலும், இட ஒதுக்கீட்டைத் தாண்டி பல சமூகத்திற்கு பாதுகாப்பு தேவைப்படுவதாகவும் இந்த அமைப்பு அரசியல் கட்சியாக மாறுவதற்கு வாய்ப்புகள் இல்லை என்றார். பிற்படுத்தப்பட்ட அனைத்து வகுப்பினரையும் ஒன்றிணைத்து முதல் கூட்டம் வரும் 18ம் தேதி கோவையில் நடத்த உள்ளதாகவும் இதில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வுகளை ஏற்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.