தமிழகத்தில் 143 பிற்படுத்தப்பட்ட சமுதாயங்கள் ஒன்றிணைந்து புதிய அமைப்பு துவக்கம்!

கோவை: தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோரின் இட ஒதுக்கீட்டையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் பொருட்டு 143 பிற்படுத்தப்பட்ட சமுதாயங்கள் இணைந்து புதிய கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளன.


கோவை: தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோரின் இட ஒதுக்கீட்டையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் பொருட்டு 143 பிற்படுத்தப்பட்ட சமுதாயங்கள் இணைந்து புதிய கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளன.

முன்னாள் காவல் துறையினர், முன்னாள் அரசு அதிகாரிகள், வழக்குரைஞர்கள் மற்றும் சமுதாய தலைவர்கள் ஒன்றிணைந்து பிற்படுத்தப்பட்டோர் உரிமைக்கான கூட்டமைப்பு என்ற அமைப்பை துவங்கியுள்ளனர்.

இதற்கான செய்தியாளர் சந்திப்பு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் இன்று நடைபெற்றது. அப்போது கூட்டமைப்பைச் சேர்ந்தவரும், முன்னாள் காவல்துறை அதிகாரியுமான ரத்தினசபாபதி பேசுகையில், தமிழகத்தில் 143 சமூகத்தினர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக உள்ளதாகவும்

பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் அவர்களுக்கான உரிமைகளை இழந்து வருகின்றனர் என்றார்.

இதுவரை எந்த அமைப்பும் இழந்த உரிமையை மீட்டெடுக்க குரல் கொடுக்கவில்லை எனவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்பதால் இளைஞர்கள், மாணவர்கள் அவர்களுக்கான உரிமையை இழந்துவிடுவதால் இந்த அமைப்பை உருவாக்கியுள்ளதாக தெரிவித்த அவர், இந்த அமைப்பு முற்றிலும் அரசியல் சார்பு இல்லாத அமைப்பு எனவும் 143 சமுதாயத்தின் ஒரே குரலாக இந்த அமைப்பு இருக்கும் எனவும் எவ்வித கருத்து வேற்றுமைக்கும் இடமின்றி இந்த அமைப்பினர் உழைப்பார்கள் என தெரிவித்தார்.

மேலும், இட ஒதுக்கீட்டைத் தாண்டி பல சமூகத்திற்கு பாதுகாப்பு தேவைப்படுவதாகவும் இந்த அமைப்பு அரசியல் கட்சியாக மாறுவதற்கு வாய்ப்புகள் இல்லை என்றார். பிற்படுத்தப்பட்ட அனைத்து வகுப்பினரையும் ஒன்றிணைத்து முதல் கூட்டம் வரும் 18ம் தேதி கோவையில் நடத்த உள்ளதாகவும் இதில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வுகளை ஏற்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...