கோவை: பொள்ளாச்சி அருகே சட்டவிரோதமாக விற்பனை செய்ய வைக்கப்பட்டிருந்த 650 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், சூதாட்டம் ஆடிய 4 பேர் உட்பட 5 பேரை கைது செய்தனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே சட்டவிரோதமாக விற்பனை செய்ய வைக்கப்பட்டிருந்த 650 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், சூதாட்டம் ஆடிய 4 பேர் உட்பட 5 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.62,820 பணத்தை பறிமுதல் செய்தனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள கொள்ளுபாளையம் கிராமத்தில் சதீஷ்குமார் என்பவரது வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாகவும், பணம் வைத்து சூதாடி வருவதாகவும், பொள்ளாச்சி தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருளரசு உத்தரவின் பேரில் அங்கு விரைந்த போலீசார், சதீஷ்குமார் வீட்டை அதிரடியாக சோதனையிட்ட போது அங்கு அட்டைப் பெட்டிகளில் மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, அங்கிருந்த 650 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், அந்த வீட்டில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த செல்வராஜ், ராஜா, கணேஷ்குமார், சிவகுமார் உள்ளிட்ட நபர்களையும் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடம் இருந்து 62 ஆயிரத்து 820 ரூபாயை பறிமுதல் செய்து கோமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். மது பாட்டில்களை சட்ட விரோதமாக பதுக்கி வைத்து இரவு பகலாக அதிக விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்து வந்ததும், லட்சக்கணக்கான ரூபாய் பணம் வைத்து சூதாடி வந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் 5 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள கொள்ளுபாளையம் கிராமத்தில் சதீஷ்குமார் என்பவரது வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாகவும், பணம் வைத்து சூதாடி வருவதாகவும், பொள்ளாச்சி தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருளரசு உத்தரவின் பேரில் அங்கு விரைந்த போலீசார், சதீஷ்குமார் வீட்டை அதிரடியாக சோதனையிட்ட போது அங்கு அட்டைப் பெட்டிகளில் மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, அங்கிருந்த 650 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், அந்த வீட்டில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த செல்வராஜ், ராஜா, கணேஷ்குமார், சிவகுமார் உள்ளிட்ட நபர்களையும் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடம் இருந்து 62 ஆயிரத்து 820 ரூபாயை பறிமுதல் செய்து கோமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். மது பாட்டில்களை சட்ட விரோதமாக பதுக்கி வைத்து இரவு பகலாக அதிக விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்து வந்ததும், லட்சக்கணக்கான ரூபாய் பணம் வைத்து சூதாடி வந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் 5 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.