சோதனைச்சாவடியை விடிய விடிய சுற்றி வந்த காட்டு யானை: அச்சத்தில் உறைந்த போலீசார்!

கோவை: கோவை அருகே சோதனைச் சாவடியை முற்றுகையிட்ட காட்டு யானை ஒன்று விடிய விடிய சுற்றி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த போலீசார் அச்சத்தில் உறைந்துபோயினர்.

கோவை: கோவை அருகே சோதனைச் சாவடியை முற்றுகையிட்ட காட்டு யானை ஒன்று விடிய விடிய சுற்றி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த போலீசார் அச்சத்தில் உறைந்துபோயினர்.

கோவை அருகே காட்டுயானை ஒன்று சோதனைச் சாவடியை முற்றுகையிட்டு சுற்றி வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்போது அங்கு பணியில் ஈடுபட்ட போலீசார் அச்சத்தில் உறைந்துபோயினர்.

கோவை அருகே ஆனைகட்டி எல்லையில் உள்ள காவல்துறை சோதனைச்சாவடி அருகே நேற்று அதிகாலை 4 மணி அளவில் காட்டு யானை ஒன்று சுற்றி வந்தது. அப்போது சோதனைச்சாவடி அறை மற்றும் அதன் வெளியே போலீசார் இருந்தனர். அப்போது அங்கிருந்த தெருநாய் ஒன்று யானையை நோக்கி சத்தமிட்டபடி குரைத்துக்கொண்டு ஓடி வந்தது. இதனால் கோபமடைந்த யானை நாயை சிறிது தூரம் விரட்டிச் சென்றது.

இதையடுத்து மீண்டும் சோதனைச்சாவடி முன் சிறிது நேரம் நின்று விட்டு அருகிலுள்ள வாழைத் தோட்டத்துக்குள் புகுந்து வாழைகளை சேதப்படுத்தி விட்டு காட்டுக்குள் சென்று விட்டது. இதனால் அந்தப் பகுதியில் காலை நேரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அச்சத்தில் உறைந்துபோய் சோதனைச் சாவடிக்குள்ளேயே அமர்ந்திருந்தனர்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...