கோவை அருகே துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த வாலிபர்..!

கோவை: கோவை சூலூர் அருகே உள்ள காடம்பாடி பகுதியில், சூலூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் ஒரு வாலிபர் கையில் துப்பாக்கியுடன் வந்துள்ளார்.


கோவை: கோவை சூலூர் அருகே உள்ள காடம்பாடி பகுதியில், சூலூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் ஒரு வாலிபர் கையில் துப்பாக்கியுடன் வந்துள்ளார்.

அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதையடுத்து, அந்த நபரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில், அவர் தேவராயன் பாளையம் பகுதியைச் சேர்ந்த நடராஜ் (வயது 35), என்பதும் இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக விலங்குகளை சுடுவதற்காக ஏர்கன் வகையைச் சேர்ந்த துப்பாக்கியை வாங்கியதாகவும், அதற்கான ரசீதும் போலீஸ் நிலையத்தில் அளித்த சான்றுகளும் தொலைந்து விட்டது, என்று கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, அவரிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார், துப்பாக்கியை ஆய்வு செய்ததில் அவரிடம் இருந்த அந்த ரக துப்பாக்கிக்கு, காவல் துறையின் அனுமதி தேவையில்லை, என்று தெரியவந்தது.

இதனையடுத்து, துப்பாக்கியை அவரிடம் ஒப்படைத்து அவரை விடுவித்தனர். துப்பாக்கியுடன் மோட்டார் சைக்கிளில் வாலிபர் சுற்றி வந்ததால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...