திருப்பூரில் அடிப்படை வசதி கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட குழந்தைகள், பெண்கள் உட்பட ஏராளமானோர் கைது!

திருப்பூர்: திருப்பூரில் அடிப்படை வசதி கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட ஏராளமானோரை காவல்துறையினர் கைது செய்தனர்.


திருப்பூர்: திருப்பூரில் அடிப்படை வசதி கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட ஏராளமானோரை காவல்துறையினர் கைது செய்தனர்.



திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 52வது வார்டு பகுதியில் உள்ள வள்ளலார் நகர், லட்சுமி நகர், மூகாம்பிகை நகர், ஜெயலலிதா நகர், சபரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.



இந்நிலையில், அப்பகுதியில் கழிவுநீர் தேங்கி இருப்பதை மாநகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தவில்லை எனவும் அதேபோல், தெரு விளக்குகள் சரியாக எரிவது இல்லை எனவும் இதனால் அப்பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் அதிகளவில் நடைபெறுவதாக மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஏற்கனவே வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்காததைச் சுட்டிக்காட்டி இன்று திருப்பூர் தாராபுரம் சாலையில் பெண்கள் உட்பட பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அதிகாரிகளை சந்தித்து மனு அளிக்க இருப்பதாக தெரிவித்தும் காவல்துறையினர் அனுமதி அளிக்காமல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக ஒரு வயது குழந்தை, பெண்கள் உட்பட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

கொரோனா தடுப்பு வழிமுறைகள் பின்பற்றி வரக்கூடிய சூழ்நிலையில் அதனை பின்பற்ற வேண்டிய காவல்துறையினரே எந்தவித முன்னேற்பாடுகளும் இல்லாமல் 40க்கும் மேற்பட்டோரை சிறிய வாகனத்தில் ஏற்றிச் சென்றது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...