கோவை: கோவையை அதிரவைத்த அப்பாவி பெண் கொலை வழக்கில் அப்ரூவராக மாறியவர், கடைசி நேரத்தில் பல்டி அடித்ததால், அதன் மீது தனியாக விசாரணை நடத்தப்படும், என்று நீதிபதி அளித்த தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவையை அதிரவைத்த அப்பாவி பெண் கொலை வழக்கில் அப்ரூவராக மாறியவர், கடைசி நேரத்தில் பல்டி அடித்ததால், அதன் மீது தனியாக விசாரணை நடத்தப்படும், என்று நீதிபதி அளித்த தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
கோவை சிவானந்தா காலனியைச் சேர்ந்த மாரிமுத்து மனைவி அம்மாசை (46), கடந்த 2011 டிசம்பர் 11 தேதி கொலை செய்யப்பட்டார். வழக்கில் கோவையைச் சேர்ந்த வக்கீல் ராஜவேலு (52), அவரது மனைவி வக்கீல் மோகனா (47), கார் டிரைவர் பழனிச்சாமி (48), ஆகியோருக்கு ஆயுள் சிறை விதித்து கோவை ஐந்தாவது கூடுதல் செஷன்ஸ் நீதிபதி முகமது பாருக் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில், மூவருடன் கைதான பிள்ளையார் புரத்தைச் சேர்ந்த பொன்ராஜ் (52), அப்ரூவராக மாறி அம்மாசை கொலை செய்யப்பட்டதை நேரில் பார்த்ததாக வாக்குமூலம் அளித்தார். இதனால், அவர் அரசு தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டார். ஆனால், கோர்ட் விசாரணையின் போது அரசு தரப்புக்கு எதிராக சாட்சியமளித்தார். கொலை பற்றி எனக்கு எதுவும் தெரியாது, என தீடீர் பல்டி அடித்தார்.
எனவே, குற்றம் முறை விசாரணை சட்டம் 308 -படி சாட்சி அளித்தவர், மீது தனியாக கொலை வழக்கு பதிவு செய்து, அதே நீதிமன்றத்தில் விசாரணை நடத்தக் கோரி அரசு தரப்பு சிறப்பு வக்கீல் சங்கரநாராயணன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, தீர்ப்பின்போது அளித்த உத்தரவில் அப்ரூவர் பொன்ராஜ் மீது தனியாக வழக்கு பதிந்து விசாரணை நடத்த அரசு வக்கீல் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொள்ளப்பட்டு பதிவு செய்யப்படுகிறது, என்றார்.
மேலும், அவர் மீது 302 கொலை செய்தல், 109 தூண்டுதல், 201 தடயத்தை அளித்தல் ஆகிய சட்டப் பிரிவில் தனியாக விசாரணை நடத்த உத்தரவிடப்படுகிறது என்றும் வழக்கில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட சான்று பொருட்கள் மற்றும் ஆவணங்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும், என தெரிவித்ததார்.
கோவை சிவானந்தா காலனியைச் சேர்ந்த மாரிமுத்து மனைவி அம்மாசை (46), கடந்த 2011 டிசம்பர் 11 தேதி கொலை செய்யப்பட்டார். வழக்கில் கோவையைச் சேர்ந்த வக்கீல் ராஜவேலு (52), அவரது மனைவி வக்கீல் மோகனா (47), கார் டிரைவர் பழனிச்சாமி (48), ஆகியோருக்கு ஆயுள் சிறை விதித்து கோவை ஐந்தாவது கூடுதல் செஷன்ஸ் நீதிபதி முகமது பாருக் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில், மூவருடன் கைதான பிள்ளையார் புரத்தைச் சேர்ந்த பொன்ராஜ் (52), அப்ரூவராக மாறி அம்மாசை கொலை செய்யப்பட்டதை நேரில் பார்த்ததாக வாக்குமூலம் அளித்தார். இதனால், அவர் அரசு தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டார். ஆனால், கோர்ட் விசாரணையின் போது அரசு தரப்புக்கு எதிராக சாட்சியமளித்தார். கொலை பற்றி எனக்கு எதுவும் தெரியாது, என தீடீர் பல்டி அடித்தார்.
எனவே, குற்றம் முறை விசாரணை சட்டம் 308 -படி சாட்சி அளித்தவர், மீது தனியாக கொலை வழக்கு பதிவு செய்து, அதே நீதிமன்றத்தில் விசாரணை நடத்தக் கோரி அரசு தரப்பு சிறப்பு வக்கீல் சங்கரநாராயணன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, தீர்ப்பின்போது அளித்த உத்தரவில் அப்ரூவர் பொன்ராஜ் மீது தனியாக வழக்கு பதிந்து விசாரணை நடத்த அரசு வக்கீல் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொள்ளப்பட்டு பதிவு செய்யப்படுகிறது, என்றார்.
மேலும், அவர் மீது 302 கொலை செய்தல், 109 தூண்டுதல், 201 தடயத்தை அளித்தல் ஆகிய சட்டப் பிரிவில் தனியாக விசாரணை நடத்த உத்தரவிடப்படுகிறது என்றும் வழக்கில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட சான்று பொருட்கள் மற்றும் ஆவணங்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும், என தெரிவித்ததார்.