நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அருகே கேத்தி பாலடா பகுதியில் இரண்டு காட்டெருமைகள் சண்டையிட்டுக் கொண்டது வைரலாகி வருகிறது.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அருகே கேத்தி பாலடா பகுதியில் இரண்டு காட்டெருமைகள் சண்டையிட்டுக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உதகை அருகே உள்ள கேத்தி பாலடா பகுதியை சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. இப்பகுதியைச் சுற்றிலும் 50க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் வாழ்ந்து வருகின்றன. இவை அவ்வப்போது சாலைகளுக்கு வந்து பொதுமக்களை அச்சுறுத்தும் சூழல் இருந்து வந்தது.
இந்நிலையில், கேத்தி பாலடா பகுதிக்கு வந்த இரண்டு காட்டெருமைகள் நீண்ட நேரமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தன. இதனை அங்கிருந்த சிலர் தங்களது செல்போன்களில் படம் எடுத்துள்ளனர்.
அந்த காட்சிகள் தற்போது சமூக வளைதலங்களில் வைரலாகி வருகிறது. இதில் ஒரு காட்டெருமையின் கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரம் சண்டையிட்டுக் கொண்டிருந்த காட்டெருமைகள் பிறகு அருகிருந்த அருகில் இருந்த சோலைப் பகுதிக்குள் சென்றன.