திருப்பூர் : டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து திருப்பூர் மத்திய தபால் நிலையத்தை முற்றுகையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருப்பூர் : டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து திருப்பூர் மத்திய தபால் நிலையத்தை முற்றுகையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றியுள்ள வேளாண் சட்ட திருத்த மசோதாக்களை எதிர்த்து கடந்த 27ம் தேதி முதல் டெல்லியில் விவசாயிகள் பெருமளவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை அடித்து துன்புறுத்திய காவல்துறையினருக்கு கண்டனம் தெரிவித்தும் திருப்பூர் மத்திய தபால் நிலையத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தின் போது, காவல்துறையினர் தடுப்பையும் மீறி மத்திய தபால் நிலையத்தை முற்றுகையிட்ட கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து, காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றியுள்ள வேளாண் சட்ட திருத்த மசோதாக்களை எதிர்த்து கடந்த 27ம் தேதி முதல் டெல்லியில் விவசாயிகள் பெருமளவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை அடித்து துன்புறுத்திய காவல்துறையினருக்கு கண்டனம் தெரிவித்தும் திருப்பூர் மத்திய தபால் நிலையத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தின் போது, காவல்துறையினர் தடுப்பையும் மீறி மத்திய தபால் நிலையத்தை முற்றுகையிட்ட கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து, காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.