கோவை: கோவை அரசு மருத்துவமனையில் கழிவறையில் இறந்த நிலையில் பெண் சிசு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் கழிவறையில் இறந்த நிலையில் பெண் சிசு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில் ரெட் ஜோன் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு பகுதியில் உள்ள கழிவறைக்கு இன்று மதியம் துப்புரவு பணியாளர் ஒருவர் துப்புரவு செய்வதற்காக சென்றார்.
அப்போது, அங்கு கழிவறையில் ஒரு சிசு இறந்த நிலையில் கிடந்தது. உடனடியாக அவர் அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களிடம் கூறினார். உடனடியாக கழிவறையிலிருந்து அந்த சிசு மீட்கப்பட்டது. பிறகு பரிசோதனை செய்ததில் அது பெண் சிசு என்பதும், அது இறந்து உள்ளது என்பதும் தெரிய வந்தது. சுமார் 2 கிலோ எடையுடன் காணப்பட்டது.
இந்த பெண் சிசு எப்படி விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு கழிவறை பகுதிக்கு வந்தது என்பது குறித்தும் ஊழியர்கள் ஒன்றும் புரியாமல் குழம்பி இருந்தனர். பின்னர் இதை தொடர்ந்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிசுவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதலில் பிறந்த குழந்தையா? இல்லை குழந்தை இறந்து பிறந்ததால் கழிவறையில் போட்டு சென்றார்களா? இல்லை குழந்தை கொல்லப்பட்ட உள்ளதா? என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோவை அரசு மருத்துவமனை கழிவறையில் இறந்த நிலையில் சிசு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில் ரெட் ஜோன் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு பகுதியில் உள்ள கழிவறைக்கு இன்று மதியம் துப்புரவு பணியாளர் ஒருவர் துப்புரவு செய்வதற்காக சென்றார்.
அப்போது, அங்கு கழிவறையில் ஒரு சிசு இறந்த நிலையில் கிடந்தது. உடனடியாக அவர் அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களிடம் கூறினார். உடனடியாக கழிவறையிலிருந்து அந்த சிசு மீட்கப்பட்டது. பிறகு பரிசோதனை செய்ததில் அது பெண் சிசு என்பதும், அது இறந்து உள்ளது என்பதும் தெரிய வந்தது. சுமார் 2 கிலோ எடையுடன் காணப்பட்டது.
இந்த பெண் சிசு எப்படி விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு கழிவறை பகுதிக்கு வந்தது என்பது குறித்தும் ஊழியர்கள் ஒன்றும் புரியாமல் குழம்பி இருந்தனர். பின்னர் இதை தொடர்ந்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிசுவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதலில் பிறந்த குழந்தையா? இல்லை குழந்தை இறந்து பிறந்ததால் கழிவறையில் போட்டு சென்றார்களா? இல்லை குழந்தை கொல்லப்பட்ட உள்ளதா? என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோவை அரசு மருத்துவமனை கழிவறையில் இறந்த நிலையில் சிசு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.